தோல்வி நிலையென நினைத்தால்...

தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?

தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?

வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா?

உரிமை இழந்தோம்
உடைமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?

தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?

விடியலுக்கில்லை தூரம்
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்?
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்?

உரிமை இழந்தோம்
உடைமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?

தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா?

விடியலுக்கில்லை தூரம்
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்?
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்?

யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா?
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா?

உரிமை இழந்தோம்
உடைமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?

யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா?
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா?

6 Comments:

  1. நட்புடன் ஜமால் said...
    நானும் பதிவிடுகிறேன்னு

    பாட்டா ...
    சி தயாளன் said...
    ஊமை விழிகள்...அருமையான பாட்டு..
    அத்திவெட்டி ஜோதிபாரதி said...
    எம் ஈழ மக்களுக்காகவே எழுதப்பட்டப் பாடலாக எண்ணுகிறேன்!
    கிஷோர் said...
    //நானும் பதிவிடுகிறேன்னு

    பாட்டா ...//

    ஆமா ஆழமான அர்த்தங்கள் உள்ள பாட்டு
    கிஷோர் said...
    //ஊமை விழிகள்...அருமையான பாட்டு..//

    ஆமாம் டொன்லீ
    கிஷோர் said...
    //எம் ஈழ மக்களுக்காகவே எழுதப்பட்டப் பாடலாக எண்ணுகிறேன்!//

    கண்டிப்பாக. இந்த பாடல் இலங்கை வானொலியில் தடை செய்யப்பட்டதாக ஒரு தகவலும் உண்டல்லவா

Post a Comment





Copyright 2006| Blogger Templates by GeckoandFly modified and converted to Blogger Beta by Blogcrowds.
No part of the content or the blog may be reproduced without prior written permission.