மிஷ்கின் திடீரென்று வந்து தனக்கென தனியிடத்தை பிடித்து தனக்கென தனி பாணியையும் உருவாக்கிக்கொண்டுள்ளவர். இங்கு திடீரென்று என்று கூறப்படுவது முதல் படத்திலேயே கவனத்தை திசை திருப்பியவர் என்றதால்.

மிஷ்கினின் படங்களில்(இதுவரை இரண்டு தான்) சில விஷயங்களை நாம் எளிதில் கவனிக்கலாம். மிஷ்கினின் படங்களில் எதார்த்தம் என்பது மிகக்குறைவாக இருக்கும். நடிகர்களின் நடிப்பில் ஒரு புதுவிதமான் நாடகத்தனம் தெரியும். இருப்பினும் மக்களின் நாடி பிடித்து அதற்கேற்றார்போல் இவரது திரைக்கதை இருப்பது தான் இவரது வெற்றியின் ரகசியம்.

இவரது சித்திரம் பேசுவதடி வெளிவந்தபோது கானா உல‌கநாதன் புண்ணியத்தில் படம் மக்கள் மனதில் இடம் பிடித்தது. பாடலுக்காக படம் பார்க்கவந்தவர்களுக்கு படத்தில் இருந்த புத்துணர்ச்சியான சில விஷயங்கள் பிடித்துப்போயின. ரவுடிகள் பிண்ணனியில் நடக்கும் காதல்கதைகள் தமிழ் சினிமாவில் ஏராளம். கிட்டத்தட்ட எல்லா தெருக்களில் இருக்கும் பழைய போஸ்டர்களில் ஒன்று இந்த வகைக்கதையுடன் தான் இருக்கும். ஆனால் இதையும் மீறி அந்த படம் வெற்றிபெற்றதற்கு காரணம் படம் முழுக்க பார்வையாளர்களை வசப்படுத்தி வைத்திருந்ததுதான். படம் இறுதியை எட்டும்போது கொஞ்சம் தொய்வாய் இருந்ததென்னமோ உண்மைதான். படம் மிகவும் பாசிடிவாக இருந்தது மேட்டினி ஷோவில் படம் விட்டுச்செல்லும் மக்களுக்கு கூட தலைவலியின்றி செல்ல உதவியது.

அஞ்சாதேவிலும் கானா/குத்துப்பாடல்கள் இருந்தாலும் படம் பெயர்பெற சித்திரம்பேசுதடி படமே போதுமானதாக இருந்தது. இயக்குனர் இந்த படத்தை திரையுலகம் மீதுள்ள வெறுப்பினால் எடுத்ததாக கூறுகிறார். அவரது நந்தலாலா வந்திருக்கவேண்டிய நேரம் அது. அந்த படத்திற்கு சரியாக கிடைக்காத ஒத்துழைப்பினால் எப்படியாவது நன்றாக ஓடும் ஒரு வர்த்தகப்படம் எடுத்து தன் பெயரை நிலைநிறுத்திக்கொள்ளும் கட்டாயத்தில் எடுத்தபடம் இது. அதனாலேயே சில காட்சிகள் பகிடி போல் இருக்கும். அஞ்சாதே சற்று அனைத்து களங்களையும்(காதல், நட்பு, சென்டிமென்ட், ரவுடிகள், துப்பறிதல்) கலந்துகட்டி ஒரு சூப்பர் மசாலாவாக இருந்தது.

இந்த இரண்டு படங்களிலும் சில விஷயங்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்ந்து வந்திருந்தன. அவற்றைப்பற்றி...


  • இரண்டிலும் கதாநாயகர்கள் வீட்டை மதிப்பதில்லை

  • இரண்டு படங்களிலும் தங்கைகள் முக்கிய கதாபாத்திரங்கள். அஞ்சாதேவில் நரேன் மற்றும் அஜ்மல் இருவருக்கும் தங்கைகள் உண்டு. இரண்டு படங்களிலும் தங்கைகள் முக்கிய கதாபாத்திரங்கள்

  • ஏதேனும் ஒரு கதாபாத்திரம் எப்போதும் குடியிலேயே இருக்கும். சித்திரம் பேசுதடியில் நண்பன், அஞ்சாதேயில் பாதிபடம் டாஸ்மாக் தான்

  • சண்டைக்காட்சிகள் ஒருவன் ஒருவனுடன் மோதுவதாக இருக்கும். கூட்டமாக வில்லன் ஆட்கள் வந்தாலும் கதாநாயகனுடன் ஒருவர்தான் மோதுவான். அதுவும் சண்டை வித்தியாசமாக இருக்கும். கதாநாயகனுக்கு ஏதோ வெயில் தலைக்கு ஏறியது போல் இருக்கும் சண்டைகள்

  • 'அய்யோ' என்ற வசனம் இரண்டு படத்தின் கிளைமாக்ஸிலும் உண்டு. சித்திரம்பேசுதடியில் கதாநாயகன் 'அய்யோ சாரு' என்பான். அஞ்சாதேயில் விஜயலட்சுமி, 'அய்யோ அண்ணா' என்பாள். இது எதேச்சையாக நடக்கும் விஷயமாக தெரியவில்லை. சித்திரம்பேசுதடியில் இந்த வசனம் மிகப்பிரசித்தம்.

  • ரவுடிகளின் பின்புலம் வித்தியாசமான இடங்கள். சித்திரம்பேசுதடியில் வாழைமண்டி. அஞ்சாதேயில் ஒரு மெக்கானிக் ஷெட் மற்றும் ஐஸ் ஃபேக்டரி

  • இரண்டு படங்களிலும் மெல்லிய அதிர்ச்சி படத்தை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச்செல்லும்.

கிரிவலம்

ஒவ்வொரு பௌர்ணமியும் திருவண்ணாமலைக்கு புதுசாயம் பூசுகின்றது. சாயங்கள் அனைத்தும் அவசர அவசரமாக அழிபட்டு அடுத்தநாளில் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புகின்றது ஊர். ஆனாலும் கிரிவலப்பாதை எங்கும் குப்பையையும் கற்பூர மணத்தையும் அப்படியே விட்டுவிட்டு.

திருவண்ணாமலையில் இருப்போருக்கு கிரிவலநாள் ஒரு அரசியல் ஊர்வலம் நடக்கும் நாள் போல, அவ்வளவு இடையூறுகள். ஆனால் மக்கள் அழகாக புதிய வழிகளை பின்பற்றி தங்கள் கூடுகளுக்கு திரும்புவர்.

இத்தனை திருவண்ணாமலை அனுபவங்களும் நான் அங்கு கல்லூரியில் படித்த காலத்தில் கிடைத்தன. கல்லூரி காலத்தில் நாங்கள் கிரிவலம் செல்கிறோம் என்றால் அந்த தினத்தன்று எங்கள் கல்லூரியின் பேர் பெற்ற ஃபிகர் ஏதாவது கிரிவலம் செல்வதைக்கேள்விப்பட்டிருப்போம்.

ஆனால் பல ஆண்டுகள் கழித்து இன்று செல்வது என் அலுவலக நண்பருக்காக. நண்பன் என்று சொல்லாமல் நண்பர் என்று சொல்லுவதிலேயே தெரிந்திருக்கும் அவர் ஒரு அலுவலக நண்பர் என்று. அதுவும் மேல் அதிகாரி வேறு. அவரும் நானும் பலமுறை யோசித்து இறுதியில் இன்று செயல்படுத்தி வந்துவிட்டோம்.

பேருந்து நிலையம் தற்காலிகமாக மாற்றப்பட்டிருந்ததால் எப்படியோ கஷ்டப்பட்டு கோவில் வாசல் அருகே வந்தோம். அங்கு மிகப்பெரிய அளவில் கற்பூரங்கள் எரிந்து சூழ்நிலையை மாற்றிக்கொண்டிருந்தது. கோவிலுக்கும் சின்னதேர் இருக்கும் இடத்திற்கும் நடுவில் இருந்த மூத்திரசந்துகூட கற்பூரமணம் கமழ்ந்தது.

கிரிவலம் மக்களுக்கு ஆன்மீகத்தை விட வயிற்றுக்கே முக்கியத்துவம் அளிக்கிறது என்பது வழியெங்கும் அமைக்கப்பட்டிருக்கும் கடைகளில் இருந்தே கண்டுகொள்ளலாம். வீடுகள் கூட அந்த ஒரு நாளுக்காக ஏதோ ஒரு விதத்தில் கடையாக மாறிக்கொண்டிருந்தன. ஒவ்வொருவருக்கும் உள்ளே ஒரு வியாபாரி, தனக்கேற்ற வாடிக்கையாளனுக்கோ அல்லது சந்தர்ப்பத்திற்கோ காத்திருக்கிறான். எங்களை மட்டும் விட்டுவிடுமா இந்த இட்லிக்கடைகள்? நன்றாக சாப்பிட்டபின் நடக்கத் துவங்கினோம்.

எத்தனை விதமான மனிதர்கள், கிட்டத்தட்ட சென்னை தியாகராயநகரில் விழாக்காலத்தில் இருப்பதைப்போல, பாதிபேருக்கு மேல் கண்டிப்பாக பக்தியுடன் செல்லவில்லை என்று என்னால் எங்கு வேண்டுமானாலும் வந்து சொல்லமுடியும். சமூகம் நம்மில் இருந்தே தொடங்குகின்றது அல்லவா!

இப்போதெல்லாம் பலர் செருப்பு போட்டு சுற்ற ஆரம்பித்துள்ளனர். முன்பெல்லாம் வெறும் காலில் இரவில் சுற்றுவோம். ஆனால் திருவண்ணாமலையின் வெயில் பகலெல்லாம் தார்ரோடால் சேமித்துவைக்கப்பட்டு இரவில் வெளிவரும். நம் கால்களை கொப்புளம் போட. ஆனால் அடுத்தநாள் நன்றாக இருப்பதாகவே தோன்றும். என் கல்லூரி நண்பன் ஒருவனுக்கு காலில் ஆணி இருந்ததால் அடிக்கடி உட்கார்ந்துவிடுவான். தோளில் கைவைத்து வருவான். இப்போது அதைப்போன்ற மக்களைப்பார்க்கும்போதெல்லாம் அவர்களுக்கு என்ன வலியோ என்றுதான் எண்ணம் செல்கின்றது

திடீரென்று கடந்து செல்லும் பக்தர்குழுக்களின் உரத்த பாடல்கள், சைக்கிளில் செல்லும்போது லாரிக்காரன் ரோட்டோரமாய் அணைத்து செல்வதைப்போல் திடீரென்று நினைவு, பேச்சு அனைத்தையும் கலைத்து வேகமாய் செல்கின்றன. இந்த பாடலை அவர்கள் மனதார‌ப்பாடுகிறார்களா அல்லது அனிச்சையாய் பாடுகின்றார்களா என்பது புதிராக உள்ளது. அப்படி மனமின்றி பாடிச்செல்பவனில் ஒருவனாவது வீட்டில் தனியாய் விட்டுவந்த மனைவி மீது சந்தேகத்துடன் இருப்பான் தானே?

இப்படி எல்லாம் தான் நான் நினைத்துக்கொண்டு நடந்துகொண்டிருக்கிறேன். என் நண்பராவது நல்ல எண்ணத்துடன் வருவார் என்று நினைக்கிறேன். அவர் மீது அலுவலகத்தில் எல்லோருக்கும் பயம் கலந்த மரியாதை உண்டு. மனிதர் எப்போது எரிந்து விழுவார் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் இன்று படு சாந்தமாக இருக்கிறார். யார் யாருக்கு என்ன என்ன கவலைகளோ?

அடிஅண்ணாமலை வந்தால் எப்பேறுபெற்றவனுக்கும் களைப்பு வரும். எங்களுக்கு தாகமும் சேர்ந்து வந்தது. இளநீர் குடிக்கச்சென்றொம். எல்லாவற்றையும் பற்றி கருத்து இருக்கவேண்டுமா என்ன? இளநீர் விஷயத்தில் தாகம் மட்டும்தான் இருக்கிறது.

இளநீர்க்காரன் மிக பிசியாக இருந்தான். அவனிடம் இருந்து வாங்குவதற்குள் நுரை தள்ளிவிடும்போல. கடைசியாக அவன் வாங்கிய விலையை விட கிட்டத்தட்ட 10 மடங்கு அதிக விலைக்கு வாங்கினோம். என் நண்பர் விலையை பேரம் பேச முயல அது அவனுக்குள் இருந்த முதலாளித்துவத்தை எழுப்பியது. கன்னாபின்னாவென்று திட்ட ஆரம்பித்ததும், அலுவலகத்தில் அனைவரையும் போட்டு வாங்கும் நண்பர் முகம் சிவக்க கைநடுங்க அவனிடம் பேசிக்கொண்டிருந்தது என்னவோ போல் இருந்தது. ஒருவேளை நான் அங்கு இல்லாமல் இருந்து இருக்கலாம் என்று நண்பர் எண்ணுபவர் போல் காணப்பட்டார். நண்பரின் பேரத்திற்கு அவன் படிந்துவராததை ஸ்ட்ராவில் என் இளநீரின் சுவையுடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.

"நீயே வச்சிக்கோ உன் இளனீய, தோப்பு விலை சொல்ற" என்றார் நண்பர் இறுதியாக‌.

"அருவா கழுத்தில் எற‌ங்கிடும். ஒழுங்கா வாங்கிட்டு போய்டு. வெட்டிவச்சிருக்க என்னை என்ன கேணப்**** நெனச்சியா? உன்கூட வந்த மனுஷன் அமைதியா குடிக்கல? உனக்கு மட்டும் என்ன ஒரு முழமா இருக்கு?" என்று இளநீர்க்காரன் அமைதியாக சொல்ல,

நண்பர், "சரி கொடு. அண்ணாமலையாருக்கு போட்டதா நெனச்சிக்கறேன்" என்றார்.

இளநீர் கொடுத்தான் என்பதை விட போட்டான் என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு என் நண்பர் வாழ்நாளில் கேவலப்பட்டதே இல்லை என்பதுபோல் முகம் இருந்தது. இளநீர் விற்பவர் என்று சொல்ல மனமின்றி விற்பவன் என்று சொல்கிறேன். யார் சொல்லிக்கொடுத்தது இது?

இளநீர் குடுத்ததும் உள்ளே இருக்கும் வழுக்கைத்தேங்காயை எடுத்துக்கொடுக்க அவனிடம் இருவரும் சென்றோம். என் நண்பனைப்பார்த்ததும் என்ன நினைத்தானோ தெரியவில்லை, "அதெல்லாம் வெட்டித்தரமுடியாது இருக்கற கும்பல பார்த்த இல்ல, வேணும்னா பையில போட்டு வீட்டுக்கு எடுத்துட்டுப்போய் வெட்டித்துண்ணு" என்றான். நானும் இதற்காய் காத்திருந்தது போல, "வாங்க சார் போகலாம், இந்த இளனீல வழுக்கையே இருக்காது. நாமதான் அவசரப்பட்டு அவன்கிட்ட கேட்டுட்டோம்" என்றேன்.

நண்பருக்கு இதைவிட ஒரு நல்ல கிரிவலம் அமைந்திருக்காது என்று நினைத்திருக்கையில் 2 போலீஸ்காரர்கள் வந்தனர். இதுவரை முதலாளிபோல் இருந்த இளநீர்க்காரன் சற்று மிரள ஆரம்பித்தான்.

நடக்க ஆரம்பித்த என்னை நண்பர் நிறுத்தினார். கொஞ்சம் இருங்க ரெஸ்ட் எடுத்துவிட்டு போகலாம் என்றார்.

எதற்காக அந்த போலீஸ்காரர் அந்த இளநீர்க்காரனை அறைந்தார் என்பது கேட்கும் தொலைவில் நாங்கள் நிற்கவில்லை. ஆனால் அறை பொளேரென்று விழுந்தது மட்டும் கேட்டது. அவன் கைகட்டி குனிந்து நின்றான். அவனது பக்கத்தில் ஒரு சின்னபையனும் அதே நிலையில் கை கட்டி நின்றிருந்தான். சற்று முன் பிரம்மாண்டநாயகனாய் இருந்த இளநீர்க்காரன் திடீரென்று பாதாளத்தில் நின்றிருந்தான். என் நண்பரை மிரட்டியது மட்டும் இளநீர்க்காரன் பிரம்மாண்ட நாயகனாய்த்தெரிய காரணம் இல்லை என்று நம்பிக்கொண்டிருந்தேன்.

ஒரு பலத்தின் முன்பு அடிமையாய் கூனிக்குறுகி நின்றுகொண்டிருந்தான். முதலாளித்துவம் என்று சொன்னதை எல்லாம் திரும்பபெறுகிறேன். பலத்தின் முன் அனைவரும் சப்பைதான். அவனது அவமானத்தை ஏதோ ஒரு விதத்தில் என்னாலும் உணர முடிந்தது.

அலுவலகத்தில் மேல் உள்ளோரிடம் படும் அவமானத்திற்கு இது சற்றும் குறைந்ததல்ல. வலியோரிடம் படும் அவமானம் மட்டும் எப்பொதும் உரைப்பதே இல்லை. ஆனால் மனதில் எங்கோ சென்று மறைந்துகொள்கின்றது, மீண்டு எழ துணிச்சலின்றி அப்படியே வடு மேல் வடுவாய் படிந்து விடுகின்றது. சமயத்தில் வடுவின் வலி அதிகரிக்கும்போது, குடும்பத்திலோ இல்லை நமக்கு கீழ் உள்ளோர் மேலோ ஆயுதமாய் செலுத்தப்படுகின்றது. தற்கால வருணாசிரமம் மிகவும் கொடியதாய் உள்ளது. மனதையும் புதுவிதமாய் காயப்படுத்துகின்றது.

எல்லாம் முடிந்தபின் நண்பர் சொன்னார், "அப்போவே சொன்னேன் இல்ல, அண்ணாமலையான் பார்த்துப்பான்னு".

எங்கிருந்தோ ஓடிவந்துகொண்டிருந்த கூட்டம் "அண்ணாமலையானுக்கு அரோகரா" என்று கத்திக்கொண்டே சென்றுகொண்டிருந்தது. இங்கு இருந்த மக்கள் கூட்டம் பக்கத்தில் இருந்த சோளக்கடைக்கு மாறிச்சென்று அங்கு கொறிக்கத்தொடங்கியது.

காசியில் கங்கையில் குளித்து அனைத்துப் பாவங்களையும் நீக்கிக்கொண்டு கரை ஏறும்போது, ஓரமாக முழு ஈரமாக நின்றிருந்தாள் ஒரு அழகிய பெண்

என்னைப்பார்த்துக்கொண்டே டைப்படித்த அமுதா என் டைப்ரைட்டருக்கருகே விட்டுச்சென்ற தாளில், ASDFGF;LKJHJ

தனியாய் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது துணையாரும் இல்லையே என்று வருத்தப்பட்ட கணத்தில், தட்டில் இருந்து மறைந்தது ஒரு இட்லி

இப்படி இரவெல்லாம் தூங்கவிடாமல் மேலே படுத்தால் என்ன செய்வது? படுத்தாலும் பரவாயில்லை, கடிக்காமல் இரு என் அருமை மூட்டைபூச்சியே

i pressd lift button to top most floor.instead of going up,it went down as if cable is cut.நாயே மெத்தையில தூங்கி கீழ விழுறதே பிழைப்பா போச்சு

கோவிலில் புளியோதரை சாப்பிட்டுக்கொண்டே மனைவி கணவனிடம் "புளியோதரை சூப்பரா இருக்கில்ல". கணவன்,"நீ சமைக்கிற லட்சணம் அப்படி"

I met a nice tamil girl in gray chudi in my new office yesterday. She was seeing me very often. I too responded. Until i see her metti

The last man on earth was tweeting alone, suddenly somebody started follwing :-)

நீண்ட காலத்திற்கு முன் சொன்னது போல, இந்த வலைத்தளத்தை லேசாக பெயர்த்து சொந்த தளத்தில் வேர்ட்பிரஸில் நிறுவி உள்ளேன்.

இன்னும் ஆரம்பகட்ட பிளாகர் மற்றும் வேர்ட்பிரஸ் புது இட குழப்பங்கள் தீரவில்லை. எனவே சில பல குழப்பங்கள் சில நாட்கள் புதிய வலைத்தளத்தில் இருக்கலாம். கொஞ்சம் பொருத்துக்கொள்ளுங்கள்.

ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்க விரும்பாததாலும், திடீரென்று ரிசெஷனில் புதிய வலைத்தளத்தை நிர்வகிக்க முடியாமல் போனால் என்ன செய்வது என்ற முன்னெச்சரிக்கையினாலும், இனி வரும் பதிவுகள் இரண்டு வலைத்தளத்திலும் வரும்.

ஆனால் தமிழ்மணத்தில் ஏதேனும் ஒன்றைத்தான் காட்ட எண்ணம்.

நீ என்னடா பெரிய ஆள்? இவ்ளோ பில்ட் அப் கொடுக்கறே என்று சொல்லும் நண்பர்களுக்கு,

என்னையும் மதிச்சு கொஞ்சம்பேரு ஆர்.எஸ்.எஸ் ஃபீட் மூலமா பின் தொடர்கிறார்கள். அவர்களுக்கு சென்று சேரத்தான் இந்த செய்தி :)

http://kishoresays.com/blog/

குறும்படம் என்பது தமிழில் சோகமயமாகவோ அல்லது மெதுவான நகர்வுகளோடும் இருக்கவேண்டும் என்பது போன்ற சில விதிகளுடனே பெரும்பாலும் காணப்படும். அதை தகர்த்து கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் சொல்ல வந்த விஷயத்தை நச்சென்று சொல்லி முடிக்கின்றது தாயம். அதில் சில சமூக செய்திகளும் இருப்பது ஒரு ப்ளஸ்.

தாயம் என்ற இந்த குறும்படத்தின் இயக்குனர் மதிமாறன் புகழேந்தி.

அருண் பலமுறை எழுதியும் தேறமுடியாத ஒரு சப்ஜெக்ட்டை பேப்பர் சேசிங் மூலம் முறியடிக்க ஐடியா கொடுக்கிறான் நண்பன் சந்தோஷ். சந்தோஷுக்கு தெரிந்த பல்கலைக்கழக ஆளிடம் பணத்தை கொடுத்தபின் தான் தெரிகின்றது சந்தோஷ் ஒரு கஞ்சா பார்ட்டி என்று. சந்தோஷும் அருண் நினைத்தபடியே ஒரு ஏமாற்று வேலைதான் செய்கிறான். ஆனால் அது இறுதி வரை அருணிற்கு தெரியாமல் பார்த்துக்கொள்கிறான். இறுதியில் யார் வெல்கிறார்கள் என்பதே கதை.

அமோரஸ் பெர்ராஸ்(தமிழில் ஆயுத எழுத்து) போல் இருவரின் கண்ணோட்டத்திலும் படம் பயணிக்கின்றது. முதல்பாதி அருணின் கண்ணோட்டத்தில் அவன் தேர்வு முடிவிற்காக காத்துக்கொண்டிருப்பது வரை நீள்கின்றது.

அடுத்தபாதி சந்தோஷின் கண்ணோட்டத்தில் செல்கின்றது. இவனும் எல்லா பித்தலாட்டத்தையும் செய்து அருணின் தேர்வுமுடிவிற்காக காத்திருக்கும்போது அருண் மற்றும் சந்தோஷின் கண்ணோட்டங்கள் இணைந்து முடிவு வருகின்றது.

Part-1





Part-2






இந்த ஒரு குட்டிப்படத்தில், வாய்ப்பு(Probability) பற்றி இணைத்திருப்பது அருமை. அதேபோல் ஒரு சின்ன சமூக கருத்தையும் சொல்லி இருப்பது பாராட்டத்தக்கது.

இயக்குனர் ரஹ்மானின் இசைப்பிரியராக இருப்பதால் அடா மற்றும் ஸ்லம்டாக் மில்லியனர் பாடல்கள் மற்றும் இசை சரியான இடத்தில் பயன்படுத்தியுள்ளார்.

உச்சகட்ட காட்சியில் இசையும் காட்சியும் இணைந்து விருந்தளிக்கின்றன.

இயக்குனருக்கு முதல் முயற்சி இது என்று சொன்னால் கூட நம்ப முடியவில்லை. பாராட்டப்பட வேண்டிய ஒரு முதல்முயற்சி.

இவ்வளவு சொல்லிவிட்டு படத்தில் உள்ள குறைகளை சொல்லாமல் விடுவது சரி அல்ல. :)

படத்தின் நீளம் சற்று அதிகம். ஒரு குறும்படத்தை இவ்வளவு நேரம் தாக்குபிடித்து பார்க்கவைப்பது சற்று கஷ்டமான வேலை. ஆனால் அதில் வெற்றி கிடைத்திருக்கிறது என்று தான் நினைக்கிறேன்.

வசனம், படம் முழுக்க பேசிக்கொண்டே இருக்கிறார்கள், பார்வையாளர்களுக்கு சில விஷயங்களை கற்றுக்கொடுப்பதுபோல் சில வசனங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

அருணின் கண்ணோட்டம் இன்னும் சரியாக காட்டப்படாதது. கதையின் இரண்டாம் பாகத்தில் இருந்த அழுத்தம் முதல் பாதியில் இல்லை.

இந்த படத்தை UNCUT ஆக பார்த்தவன் என்பதால் இந்த படத்தின் எடிட்டிங் மற்றும் நேர மேலாண்மை அட்டகாசம்.

அருமையான எடிட்டிங் இந்த படத்தை தொழில்நுட்ப ரீதியில் பேசவைக்கின்றது.

வசனம் பல இடங்களில் படம் பார்க்கிறோம் என்ற உணர்வின்றி இயல்பாக இருக்கின்றது

இந்த படத்தை பார்க்கும்போது தென்படும் சில புத்திசாலித்தனமான திரைக்கதை சமாச்சாரங்களை நான் கூறினால் பார்க்கும்போது உங்கள் ஆவலை குறைத்துவிடும் என்பதால், அதை நீங்களே கண்டுகொள்ளுங்கள்.

படம் பார்த்தபின் சந்தோஷ்/அருண் யாருக்கு உண்மையில் வெற்றி என்பதை சற்று யோசித்துப்பாருங்கள், உங்களை அதன் விடை ஆச்சர்யப்படுத்தும்

மன்னார்குடி டேஸ்

மன்னார்குடி ஒரு நகரத்திற்கு சற்றும் குறைவின்றி எல்லா வசதிகளுடன், கிராமிய மணத்துடன் இருக்கும் ஒரு திருவாரூர் மாவட்ட ஊர். என்னதான் திருவாரூர் என்று சொல்லிக்கொண்டாலும் மக்கள் மனதில் இன்னும் தஞ்சாவூர்தான் விருப்பமான ஊர்.

அதிகாலையில் எழுந்துவிடும் ஊர். இன்னமும் மாட்டுவண்டிகளின் ஆதிக்கம் ரோட்டில் அதிகம் இருக்கும். அதுவும் கொம்பில்லாத ஒருவகை மாடுகள் இங்கு வண்டி இழுக்க அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

சாதிகளுக்கு தனியே வீதிகளும், விரால் மீன் விருப்பும், சட்டென சீறும் கோபமும், இன்னமும் சாணி மணம் கமழும் மண்ணும், அதிமுக பினாமிகளும், பந்தலடியும், தேரடியும், ஃபின்ட்லே மற்றும் நேஷனல் பள்ளிகளும், SGS கேபிளும் மன்னைக்கு உரித்தானவை.

மன்னை கிட்டத்தட்ட முக்கிய ஊர்களுக்கு நடுவில் இருக்கின்றது. இங்கிருந்து முக்கிய ஊர்கள் கிட்டத்தட்ட 30 முதல் 40 கிமீகளுக்குள் இருக்கின்றன என்றும் சொல்லலாம். தஞ்சை, நாகை, திருவாரூர், குடந்தை, பட்டுக்கோட்டை போன்ற ஊர்கள் அருகில் உள்ளன.

இந்த ஊரில் நான் பிறந்ததையும், விடுமுறைகளுக்கு சென்று வந்ததையும் தவிர எந்த ஒரு பெரிய சம்பந்தமும் எனக்கும் இந்த ஊருக்கும் இல்லை. எனவே என்னால் முடிந்த/தெரிந்த‌ வரை மன்னார்குடி பற்றி எழுதப்போகிறேன்.

தவறுகள் திருத்தப்படுவதற்கே, திருத்துங்கள்.

காங்கிரஸ் அரசு ஸ்திரமான ஆட்சிமையத்தை கொண்டிருக்கவில்லை. மன்மோகன்சிங் பிரதமராக முன்னிருத்தப்பட்டாலும், சோனியா குடும்பமே ஆட்சி செய்தது. (சீனா ஒலிம்பிக் போட்டியின் போது சோனியாவிற்கு அழைப்பு அனுப்பியது ஆனால் மன்மோகன்சிங்கிற்கு அனுப்பவில்லை)

அமெரிக்காவின் கூலியாக செயல்பட்டது. இந்தியாவின் தொலைநோக்கு திட்டங்களுக்கு இது உதவுவதாக அவர்கள் கூறிக்கொண்டாலும், உலகநாடுகள் மத்தியில் இது ஒரு தலைகுனிவே.

கடந்த காங்கிரஸ் ஆட்சியின் சாதனை என்று எந்த ஒரு விஷயத்தையும் நம்மால் எளிதில் நினைவுகூறமுடியாது. இப்படி இருந்தது ஆட்சி.

இலங்கை விஷயத்தில் தமிழர்களை மீண்டும் ஒருமுறை திட்டமிட்டு ஏமாற்றியது. பல்லாயிரம் தமிழர்கள் உயிரை இலங்கை ராணுவம் அழிக்க, இந்தியா மறைமுகமாக நேரடி உதவி அளித்தது.

இலங்கையில் நடந்த இனவொழிப்பை கண்டிக்ககூட இல்லை. காஸாவில் நடந்த யுத்தத்தை கண்டித்த காங்கிரஸ் அரசுக்கு இலங்கை கண்ணில் தெரியவே இல்லை. ஒரு குருட்டு அரசாங்கம் நடத்தப்பட்டது.

திமுக தமிழினத்தலைவரை ஒவ்வொரு முறையும் தங்கள் தலைவராக ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கும் கட்சியாக இருந்துகொண்டு இலங்கை விவகாரத்தை கண்டிக்க பிரதமருக்கு கடிதம் எழுதி, தங்கள் பங்கிற்கு தமிழர்களை ஏமாற்றினர்.

திமுக ஒரு குடும்பகட்சியாக மாறி வருவதால், அவர்களை தேர்ந்தெடுத்தால் தமிழ்நாட்டிற்கு எந்த அளவில் நன்மைகள் கிடைக்கும் என்பது கேள்விக்குறி.

திமுகவால் ஒரு திறமையான ஆட்சியை தமிழகத்தில் கொடுக்க முடியவில்லை. நீதிமன்றத்தில் நடந்த வழக்கறிஞர் காவல்துறை சம்பவத்தில் மிக மோசமான அணுகுமுறையை கையாண்டது.

எதிர்கட்சிகளில் இருந்து வருபவர்களை எல்லாம் ஏற்றுக்கொள்ளும் தாராளமான கட்சியாக திமுக இருந்தாலும், கொள்கை அடிப்படை ஏதும் இன்றி வருவோரை எல்லாம் சேர்த்துக்கொள்வதால் கட்சி மீதான நம்பிக்கை குறைந்திருக்கிறது.

தமிழர்களின் உயிர்களை மிக துச்சமாக மதிக்கும் இந்த கூட்டணி ஆட்சிக்கு வந்தால், தமிழர்களின் நலன் பாதிக்கப்படும்.

சுருக்கமாக சொன்னால், தமிழர்களுக்கெதிரான கூட்டணி இது.

அதீத வேலையும், தேர்தல் பொருட்டு உடையும் பிம்பங்களும், வாக்குறுதிகளும் மனச்சோர்வை அளிக்கின்றன. கையாலாகாத்தனமும் வோட்டுகளின் பலவீனமும் இருக்கும்வரை இந்தியா வளரப்போவதில்லை. இதைப்பற்றி எழுதியும் ஒரு பலனும் இல்லை.

எழுதுவது ஏன் என்ற கேள்வியும், எதை எழுதுவது என்பது பற்றி மீண்டும் ஒருமுறை சிந்தித்துக்கொண்டிருக்கின்றேன். பலர் சிறப்பாக எழுதுகின்றனர் அதை படித்துக்கொண்டிருப்பதே இன்பம் அளிக்கின்றது.

சமீபத்தில் பார்த்த படங்களில் டில்லி 6, வெண்ணிலா கபடி குழு, லாடம் நன்றாக இருந்தன. லாடம் நல்ல படம் என்று சொல்லமுடியாத வரிசை ஆனால், சார்மிக்காகவும் வித்தியாசமான உருவாக்கத்திற்காகவும் பார்க்கலாம்.

ஆனந்த தாண்டவம் பாடல்கள் பற்றி ஆந்திர நண்பர் ஒருவர் கேட்டதால் கேட்டுப்பார்த்தேன். நன்றாக உள்ளன.

தேவனின் சிஐடி சந்துரு நாவல் படித்தேன். அந்த காலத்திற்கு நன்றாக இருந்து இருக்கலாம். இப்போதைக்கு நேர விரயம். கதாநாயகன் இருந்த இடத்திலேயே எல்லாம் ஞானதிருஷ்டி போல கண்டறிகின்றான். கிழக்கு பதிப்பகம் வெளியீட்டில் படித்தேன்.

கிழக்கு பதிப்பகம் ஒரு புதிய திரட்டியை ஆரம்பிக்கலாம்(எனக்கு தெரியவில்லை, இருந்தாலும் இருக்கலாம்). ட்விட்டரை முழுவதும் வியாபித்திருக்கின்றனர். அவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட ஒழுங்குமுறையுடன் செயல்ப‌டுவதாக தோன்றுகின்றது. ஒரு கார்பரேட் நிறுவனம் போல்.

கொஞ்சம் வித்தியாசமான தலைப்பும் அங்கும் இங்கும் இருந்து மொழிபெயர்க்கும் திறமையும் இருந்தால், கிழக்கு பதிப்பகத்தில் ஒரு புத்தகம் எளிதில் எழுதிவிடலாம். அப்படியே பெயருக்கு முன் ரைட்டர் என்று போட்டு ஒரு இணையத்தளமும் ஆரம்பித்துக்கொள்ளலாம்.

இந்த வக்கீல் போலீஸ் பிரச்சினை இத்தோடு முடியப்போவதாக தெரியவில்லை. யார் பக்கம் நியாயம் இருக்கின்றது என்பது இவ்வளவு இடியாப்பச்சிக்கலாக இருந்தால், அதை தேர்தலில் பரிமாறுவது கடினம். எனவே எதிர்கட்சிகளுக்கு இந்த விஷயம் அவ்வளவு பெரிய அவல் அல்ல.

என் தங்கையும் காதலியும் அடிக்கடி இங்கு வந்து படிப்பதால், பொறுப்புடன் எழுதவேண்டி இருக்கின்றது. எழுதிய சிலவற்றை அவசரமாக அழிக்கவும் நேரிடுகின்றது. :)

சில பதிவுகள் படிப்பதை மற்றும் சிலபேரை ட்விட்டரில் தொடர்வதை நிறுத்தியபின் நாட்கள் நிம்மதியுடன் கழிகின்றன.

அன்னியநாட்டு வாழ்க்கையை சீக்கிரம் முடித்துக்கொண்டு வீடு திரும்ப நாளுக்கு நாள் கோரிக்கை வலுக்கின்றது. ஏடிஎம்மில் பின் நம்பருக்கு 6 எண்களுக்கு பதில் இந்தியா போல் 4 நம்பர்கள் அழுத்தியபோதே நானும் இந்தியா செல்ல தயாராகிவிட்டேன் என்பது தெரிந்துவிட்டது.

"வெளிநாடுந்தன் வீடல்ல விடுதியடா தமிழா"

ஆனால் பொருளாதாரத்தால் வேலைவாய்ப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால் எந்த முடிவும் துணிச்சலாக எடுக்க முடிவதில்லை.

எப்போதும்போல் வடுவூர் குமார் அட்டகாசமாக எழுதிவருகின்றார். துபாயில் அவருக்கு பக்கத்தில் நாமும் இருப்பதுபோல் வாராவாரம் ஊர்சுற்றிக்காண்பிக்கிறார்.

http://madavillagam.blogspot.com

முழு கதையும் ஒரு நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணை மறு&குறுக்குவிசாரணைகள்தான். இப்படி ஒரு கதையை படித்துவிடமுடியுமா என்ற சந்தேகத்துடன் ஆரம்பித்த என்னை, வெகு சில பக்கங்களுக்குள் முடிந்துவைத்துக்கொண்டது இந்தக்கதை.

ஒரு பெரிய பணக்காரர் ஒருவர் நோய்வாய்ப்பட்டு மீண்டும் உடல் தேறிவரும்போது மர்ம‌மான முறையில் விஷம் கொடுக்கப்பட்டு உயிரிழக்கிறார். இங்கு சமய சந்தர்ப்பங்கள் வீட்டின் பெரியமாப்பிள்ளைக்கு பாதகமாக இருக்கின்றது.

அரசுதரப்பு வக்கீலுக்கு மாப்பிள்ளையை தூக்குக்கு அனுப்பியாக வேண்டிய சூழ்நிலையை வெகு சுலபமாக உருவாக்குகின்றனர் அரசுதரப்பு சாட்சிகள்.

ஆனால் எதிர்தரப்பு குற்றவாளி தரப்பு வக்கீல் அனைத்து சாட்சிகளையும், ஆயில்பேட்டால் டென்னிஸ் பந்துகளை அடித்து விளாசுவதுபோல் அனாயசமாக அடித்து ஆடுகின்றார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த வழக்கின் 9 ஜூரர்களையும் சம்மதிக்கவைக்கவேண்டும்.

இத்தனையையும் கடந்து வழக்கில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதுதான் கதை.

இந்த கதை பல இடங்களில் உணர்ச்சிவசப்படவும், கண்கலங்கவும், புல்லரிக்கவைக்கவும், சிரிக்கவைக்கவும் செய்தது.

அந்த காலத்து பேச்சுநடையும், நீதிமன்ற செயல்பாடுகளையும் விளக்கமாய் எடுத்துரைக்கின்றார் தேவன்.

நல்ல ஒரு வாசிப்பனுபவத்தை கொடுக்கும் புத்தகம் இது.

சுஜாதாவின எழுத்துநடையில் சாதாரண லீவ் லெட்டர் எழுதினாலே சுவையாக இருக்கும். அதுவும் மர்மநாவல் என்றால் கேட்கவேண்டுமா?

சுஜாதா ஒருகாலகட்டத்தில் நிறைய மர்மக்கதைகள் எழுதினார், ஆனாலும் அவர் அந்த கதைகளுக்காக மக்கள் மனதில் நிலைத்திருக்கவிரும்பவில்லை என்று தெரிகின்றது. அவரது காவியக்கதாபாத்திரங்கள் கணேஷ் மற்றும் வசந்த். இந்த பெயர்களை கடக்காமல் ஒரு வாசகன் உருவாக வாய்ப்பில்லை.

கணேஷ் வசந்த் பற்றி இங்கு சொல்லப்போவதில்லை, அவர்களைப்பற்றி தனியாக எழுதலாம் என்று எண்ணியுள்ளேன். இந்த நாவலைப்போல் இவர்கள் இருவரும் அடி வாங்கியிருக்க வாய்ப்பில்லை. அவ்வளவு அடி வாங்குகின்றனர்.

மிகவும் சுவாரசியமாக ஆவி, மறுபிறப்பு சமாச்சாரங்களை கையாண்டிருக்கின்றார் சுஜாதா. அவரைப்போன்ற அறிவியல் ஆசாமிகள் இதை நம்பினால் அவரது நம்பகத்தன்மை என்ன ஆகுமென்று அனைவருக்கும் தெரியும். அதற்கேற்றார்போல் இந்த நாவலில் அவரது பாணியில் கதையை நகற்றிச்சென்றுள்ளார்.

முதல்நாள் இரவு படிக்கத்துவங்கி லேசாக பயந்து பின் இரவு முடிந்தவரை தொடர்ந்தேன். உண்மையாகவே இந்த நாவல் லேசாக பயமுறுத்துகின்றது.

ஒரு கிராமத்தில் உள்ள பூர்வீகநிலத்தை விற்க உதவ வரும் கணேஷ், வசந்த் அந்த நிலத்தில் உள்ள வில்லங்கங்களை லேசாக கிளற, அந்த நிலத்தின் சொந்தக்காரியாக இருக்கப்போகிற ஒரு மைனர் பெண்ணால் அவளைச்சுற்றி கொலைகள் நடக்க, அதற்கு பூர்வஜென்ம ஆவிகள் துணைபோவதாக ஒட்டுமொத்த கிராமமும் நம்புகின்றது. இதை கணேஷ், வசந்த் அறிவியல் மற்றும் மூடநம்பிக்கை உதவியுடன் அணுகி அனைத்தையும் சமாளித்து வெற்றி பெறுவதுதான் கதை.

நல்ல அருமையான விறுவிறுப்பான நாவல். படித்துப்பாருங்கள்
நிறைய அறிவியல் தகவல்களை அந்தகாலத்திலேயே எழுதி கலக்கியிருக்கிறார் வாத்தியார்.

தமிழில் உள்ள வழக்கொழிந்த சொற்களை எழுதச்சொன்னார் ஜோதிபாரதி. நண்பரின் விருப்பத்திற்கிணங்க அதை சற்று அலசலாம் என்று எண்ணுகின்றேன்.

எனது 24 வருடங்களுக்குள் வழக்கொழிந்துபோன வார்த்தைகளை தேடுவதென்பது சற்று கடினம்தான். ஏனென்றால் என்னை அறியாமல் நானும் அந்த வார்த்தையை ஏற்றுக்கொண்டிருப்பேன்.

நான் பிறந்தது மட்டும் தஞ்சை மாவட்டம், வளர்ந்தது கடலூர் மாவட்டம். அடிக்கடி தஞ்சையும் சென்று வருவதால் இயல்பிலேயே எனக்கு சில குழப்பங்கள் உண்டு. சிறு வயதுவரை ஆத்தா என்று கூப்பிட்டுக்கொண்டிருந்த நான் கடலூரின் ஆதிக்கத்தால், ஆயா என்று கூப்பிட ஆரம்பித்தேன். இதில் என் ஆத்தாவுக்கு வருத்தம்தான்.

அதேபோல் மன்னார்குடியில் வேர்கடலை சாப்பிட்டுக்கொண்டிருந்த நான் கடலூர் வந்து மல்லாட்டை சாப்பிடும்படி ஆனது. மல்லாட்டை என்பது மணிலாக்கொட்டையில் இருந்து வந்தது என்பது பலருக்கு தெரிந்திருக்கும். தமிழின் தேய்வு குழந்தையில் இருந்தே தொடங்குகின்றது. எப்போது அம்மா அப்பாவுக்கு பதிலாக மம்மி டாடி வருகின்றதே, அப்போதே குழந்தைகளுக்கு தமிழ் மீதுள்ள ஆர்வம் குறைய ஆரம்பிக்கின்றது. இந்த சமயத்தில் நான் குழந்தையாக இருந்தபோது பக்கத்து வீட்டில் இருந்த ஆங்கிலோஇண்டியன் குடும்பத்தில் இருந்த சின்ன பையனை கன்னாபின்னாவென்று கண்டிக்கிறேன். அந்தப்பயலால் தான் நான் மம்மி டாடி என்று கூப்பிடுகின்றேன்.

அதேபோல் வீட்டுக்குள்ற இருந்து மன்னிக்கவும் மீண்டும் கடலூர் தலைகாட்டுகின்றது. வீட்டுக்குள் இருந்துதான் தமிழ் வாழவும் வளரவும் முடியும், தெருவோரக்கூட்டங்களிலோ அல்லது திரைப்படப்பெயர்களிலோ அல்ல.

விளையாட்டினால் ஏற்பட்ட மாற்றங்கள் தமிழில் நிறைய இருக்கின்றன. உதாரணமாக, பந்து என்ற வார்த்தை கிட்டத்தட்ட மறைந்து அதை ’bபால்’ முற்றிலுமாக ஈடுகட்டிக்கொண்டிருக்கின்றது. எனக்கு தெரிந்து நாய்த்தோல்பந்து என்று டென்னிஸ் பந்தை அழைத்திருக்கின்றேன்.

பள்ளியில் மணியடிக்கப்போகுதுடா ஓடுடா, என்ற என் பள்ளியில் நான் கூறிக்கொண்டிருந்த இடத்தில் இப்போது மணிக்கு பதில் பெல்.

காலைசாப்பாடு, மதியசாப்பாடு, இரவுசாப்பாட்டை எல்லாம் ஆங்கிலம் உண்டு செரித்து பல காலமாகிவிட்டன‌.

அசதி என்ற வார்த்தை ஓய்வெடுக்கப்போய் அங்கும் ஆங்கிலம் டய‌ர்டாகாமல் இருக்கின்றது.

இப்படி எனக்கு தெரிந்த அளவில் தமிழில் வார்த்தைகள் அங்கங்கு வழக்கொழிந்துகொண்டு செல்கின்றது.

ஒரு முழு வாக்கியத்தை பிறமொழிக்கலப்பின்றி எழுதவே இங்கு பலருக்கு இயலவில்லை என்ற விஷயம், டால்மியாபுரத்தில் ரயிலில் தலைவைத்ததன் நோக்கம் இன்று எந்த அளவில் நிறைவேறி இருக்கின்றது என்பதை தெளிவாகக்காட்டுகின்றது.

வேளாங்கன்னியில் பழைய மாதாகோவிலுக்கு செல்லும் வழியில் ஒரு கடையில், கு
ம்பி, பனிக்குழைவு என்றெல்லாம் எழுதி இருந்தது அவ்வளவு இனிதாக இருக்கும்.

தமிழை நாம் வளர்ப்பதை விட, நாம் தமிழில் வளர்வதைப்பற்றி சிந்திப்பதுதான் நம்மால் இயன்ற காரியம்.

முதலில் குழந்தைகளை தயவு செய்து தமிழ்வழிக்கல்வியில் சேர்த்து விடுங்கள்.

தமிழ்வழியில் படித்தால் ஆங்கிலம் வராது என்பதெல்லாம் சுத்தமுட்டாள்தனமான பேச்சு. அதை நம்பாதீர்கள். தமிழ்வழியில் படித்தால்தான் சிந்திக்கும் திறன் அதிகரிக்கும். புரிந்து படிக்கும்போது, இப்போதும் பள்ளியில் படித்த பரப்பு இழுவிசை, கல்லூரியில் படித்த Surface Tension-விட நன்கு புரிந்துள்ளது தெரிகின்றது.

என் அம்மா, எப்போதும் புத்தகம் படிப்பார், சாப்பிடும்போதுகூட, அவரிடம் இருந்து பற்றிக்கொண்ட இந்த படிக்கும் வழக்கம், என்னை 6வது படிப்பதற்குள் ஆனந்த விகடன் முதலிய புத்தகங்களை வாசிக்க வைத்தது. எனவே நல்ல தமிழ் புத்தகங்களை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யுங்கள்.

நீங்கள் படிக்கக்கூட வேண்டாம், சும்மா வைத்திருங்கள் படிப்பது போல், அது குழந்தைகளை பெரிதும் படிக்கும் பழக்கத்திற்கு ஊக்குவிக்கும்.

நிறைய படியுங்கள், முடிந்தவரை தமிழில் பேசுங்கள்.

ஒருமுறை கல்லூரியில் ஒரு எழுத்தாள லெக்சரர், அனைவரிடமும் சும்மா ஏதாவது கேட்டுக்கொண்டு வர, எனக்கு புத்தகம் படிக்க பிடிக்கும் என்று சொல்லியிராவிட்டால் சுஜாதாவுக்கு இப்படி நான் எழுதவேண்டிய அவசியம் இருந்திருக்காது.

புத்தகம் படிக்க பிடிக்கும் என்றதும், பிடித்த எழுத்தாளர் யார் என்றார்? சட்டென்று நினைவில் யாரும் வராததால் அப்படி எல்லாம் யாருமில்லை என்று மழுப்பினேன். உடனே இந்த சுஜாதா மாதிரி என்று இழுத்தார். உடனே அவசரமாக ஆமாம் அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொன்னேன்.

தீர்மானம் செய்தபின் ரசிகனாவது கொஞ்சம் சுலபமாகத்தான் இருந்தது. அது வரை சுஜாதாவின் என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ போன்ற புத்தகங்களை மட்டும் வீட்டு வாசலில் இருந்த ஒரு சின்ன கட்டண நூலகத்தில் தூசி தட்டி படித்திருந்தேன். அந்த நூலகத்தில் தூசி மட்டுமே இலவசம். இதன் பின் மேலும் தேட, கொஞ்சம் கொஞ்சமாக கணேஷ் வசந்த் உட்பட பலர் அந்த தூசிக்குள் இருந்து வெளிவர ஆரம்பித்திருந்தனர். ஏன் எதற்கு எப்படி என்ற மார்பகப்பால் கொடுக்கும் ஒரு பெண்ணின் படம் சற்று கிழிக்கப்பட்ட புத்தகமும் அந்த நூலகத்தில் இருந்து கிடைத்தது. ”ஏன் எதற்கு எப்படி”யில் ”எதற்கு” என்ற வார்த்தையும், ”ஏன்” என்ற வார்த்தையும் எந்தவிதத்தில் மாறுபடுகின்றன என்ற சிந்தனையிலேயே அந்த புத்தகத்தை படித்து முடித்தேன். கிட்டத்தட்ட மனப்பாடம் செய்தேன்.

அதன் பிறகு தான் ஆரம்பித்தது என் புத்தகக்காதல். அவர் சொன்ன ஒவ்வொன்றையும் தேடித்தேடி படித்தேன். இணையத்தில் தேடினேன். ஏற்கனவே கற்றதும் பெற்றதும் படிக்கத்துவங்கியதால், ஒவ்வொரு புத்தகமாக வேட்டையாடினேன். ஒவ்வொரு வருடமும் வந்து செல்லும் நெய்வேலி புத்தக கண்காட்சியில் வெறும் சுஜாதா புத்தகமாக வாங்கி சேர்க்க ஆரம்பித்தேன். எனது தொகுப்பு நல்ல நிலையில் சென்று கொண்டிருக்கும்போது அதில் சில புத்தகங்களை என் நண்பன் தொலைத்து, பின் மீண்டும் அவற்றை தேடிப்பிடித்த கதையும் நடந்தது.

சுஜாதாவின் அழகு அவரது சிக்கனத்தில் இருந்தது. அவரது வார்த்தைச்சிக்கனம் ஒரு புத்திசாலித்தனமான ஒரு எழுத்தை அடையாளம் காட்டிற்று. அதேபோல் அவரது எழுத்து ஒவ்வொரு தலைமுறைக்கும் மீண்டும் பிறந்து அந்தந்த தலைமுறைக்கு புதிதான ஒரு சுவையான அனுபவத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தது. அதற்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டு, கணையாழியின் கடைசிப்பக்கங்களும், கற்றதும் பெற்றதுமும். இரண்டும் கிட்டத்தட்ட அவரது பத்தி எழுத்துக்களே, ஆனால் அவரது எழுத்து அந்தந்த காலத்தை ஒத்து உருவாக்கப்பட்டிருந்தன. ஆனால் இன்றைக்கும் கணையாழியின் கடைசிப்பக்கங்கள் ருசியாக இருப்பது போல் எழுதுவது நிச்சயமாக அவ்வளவு எளிதல்ல.

சினிமா மற்றும் கவிதைத்துறையில், அவரது கைவண்ணம் மிளிர்ந்தது. ஹைக்கூவுக்குள் அழகாக கையைப்பிடித்து அழைத்துச்சென்று, இது ஹைக்கூ இதைப்படி ஒரு அனுபவமாக இருக்கும், இதைப்படிக்காதே இது மடக்கி எழுதப்பட்ட உரைநடை இதைப்படித்தால் பின்னந்தலை வலிக்கும் என்று சொல்லித்தந்தார். திரைக்கதை எழுதுவது எப்படி என்ற புத்தகம் இன்றும் மிகப்பிரசித்தம். ஆனால் அந்த புத்தகத்தில் கண்ணெதிரே தோன்றினாள் படமும் வந்தது எப்படி என்று புரியவில்லை. இதைக்கூட பகுத்துணரும் தன்மையை அளித்தது அவரே.

பல ஆண்டுகள் அவரது வருடாந்திர அவார்டுகளும் எனது மனதில் நான் நினைத்த அவார்டுகளும் பல முறை ஒத்துப்போய் இருந்ததில் ஒரு சந்தோஷம். ஆனால் அவரால் எனக்கு கிடைக்காத ஒரே ஒரு விஷயம் அவரை சந்திக்கும் சந்தோஷம். ஆனால் அதற்கும் அவர் ஒரு நல்ல வாசகன் வகையில் என்னைச்சேர்த்துருப்பது சந்தோஷம்தான். “ஒரு நல்ல வாசகன் அவனுக்குப் பிடித்த எழுத்தாளனைச் சந்திக்க மாட்டான்” - சுஜாதா

சுஜாதா எனக்கு ஒரு ஆசானாகவே இருந்திருக்கிறார். ஒரு ஏகலைவனாக அவரைப்பின்பற்றுவதில் பெருமிதம் அடைகின்றேன்.

“வாழ்க்கையிலும் விசிஆர் மாதிரி ஒரு ரீவைண்ட் பட்டன் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்”

“No body dies..they live in the genes and memories of their children”

பிரபஞ்சத்தின் சூன்யவெளியில் நடந்துகொண்டிருந்தபோது,
சே எங்கிருந்து வந்தது உந்த கெட்ட பழக்கம், பிரபஞ்சம், சூனியம் என்ற கெட்டவார்த்தைகள்?

மரணத்திற்கும் வாழ்க்கைக்கும் இடையில் உள்ள வினோதமான முரண்களை கடக்க நினைக்கையில்,
எங்கிருந்தோ வந்து தெறிக்கிறது எப்போதோ மன்னித்துவிட்டு வந்த நம்பிக்கைதுரோகத்தின் கடைசி பிசிறு

வரைமுறைக்குள் செல்ல நினைத்து சாலை கடக்கையில்,
வந்து முகத்தில் அறைந்து உமிழ்ந்து செல்கிறான், எதிர் பக்க பாதசாரி.
நன்றி திரு.பாதசாரி

மனதின் வலி மனதை தேடும் தேடலில் கலந்துவிடுகின்றது

எல்லாவற்றையும் கடந்து காசிக்கு செல்ல நினைக்கையில்
முதுகில் அடிக்கிறான் நான் கடவுள் ஆர்யா

கடவுள் மேல் நம்பிக்கை இல்லாமல் செல்லும் அளவு பயம் விட்டுவிடவில்லை மனதிற்கு

எரிந்த பிணங்களும் அவற்றின் வாசமும் எங்கும் வந்து கொல்லும்.
நன்றி ராஜபக்சே

இதுவரை எழுதியதை அழிக்கமுடியவில்லை, படிப்பவர்கள் அழித்துவிடுங்கள்

நினைவின் பதிவேட்டில் ஒரு புத்தகக்குறியாய்,
திருவனந்தபுரத்து வின்ஸ்டர் ஹாஸ்டலின் மழைப்பாசியும், அழுகிய சருகுகளும்




அய்யா நீங்க ஒருத்தராச்சும் எங்கள புரிஞ்சிகிட்டு இருக்கீங்க (உள்குத்துகள் இருந்தாலும்).
ரொம்ப நன்றிங்க அய்யா.

தமிழ்நாட்டுல வந்து தேர்தல்ல நில்லுங்க, உங்களை 2011 முதல்வர் ஆக்குகிறோம்.

உங்க அளவு கூட துணிச்சல் இல்லாதவனுங்க எல்லாம் அரசியல்ல இருக்கானுங்க.

என்னங்கடா நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்?

நீங்கள் காட்டவில்லை என்றால் உலகம் பார்க்காதா? இல்லை விஷயம் வெளியில் வராதா?

என் இத்தனை கடுப்பிற்கு காரணம், இந்திய செய்திகளை பற்றி அறிய இருக்கும் முக்கிய ஆங்கில ஊடகங்கள், NDTV and CNN IBN. இந்த இரண்டு இணையதளங்களையும் மட்டுமே அடிக்கடி பார்த்து செய்திகளை உடனடுக்குடன் தெரிந்துகொண்டு இருக்கும் எனக்கு, இலங்கையில் இறந்த மக்கள் பற்றிய படமோ செய்தியோ ஒன்றும் வரவில்லை.

சரி ஒரு தேடுதல் செய்து தான் பார்ப்போம் என்று பார்த்தால், அதிலும் அப்படித்தான். ஒரு பேச்சுக்கு கூட அந்த தகவல் இல்லை.

இலங்கை

சரி என்று காஸா பற்றி தேடினால், அதிலும் அமெரிக்க பார்வைதான். ஆனாலும் சில படங்களும், இறந்த மக்கள் பற்றிய செய்திகளும் இருந்தன.

காசா

இறந்தவர்கள் எல்லோரும் மனிதர்கள் தானே?

ஏன் இந்த ஓரவஞ்சனை? தமிழ் என்றால் அவ்வளவு இளக்காரமா?

கரீனா கபூரின் ஜட்டி அளவை தளத்தில் போடும் நீங்கள், அப்படியே உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் அளவையும் போடலாம். உங்களுக்கு அது தானே முக்கிய செய்தி.


தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?

தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?

வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா?

உரிமை இழந்தோம்
உடைமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?

தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?

விடியலுக்கில்லை தூரம்
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்?
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்?

உரிமை இழந்தோம்
உடைமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?

தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா?

விடியலுக்கில்லை தூரம்
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்?
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்?

யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா?
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா?

உரிமை இழந்தோம்
உடைமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?

யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா?
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா?

கைமாறிய காதலி

5 நிமிட ரயில் தூரத்தில் இருந்தாலும் தினமும் பார்க்கவேண்டும் என்ற கட்டாயம் எப்படி இல்லையோ அதே போல் அடிக்கடி பார்க்கவேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. நானும் ஜெய்யும் அடிக்கடி பார்த்துக்கொள்வதில்லை.

இருவரும் கல்லூரியில் ஒன்றாக படித்தோம். சிங்கப்பூர் வந்தும் கூட அடிக்கடி பார்த்துக்கொள்வதில்லை. எப்போதாவது பியர் அடிக்க ஒன்று கூடுவதுண்டு. கல்லூரியில், பசங்களுடன் நான் படத்திற்கு சென்றால், அதே ஷோவில் ஏதேனும் ஒரு கல்லூரி பெண்ணுடன் ஓரசீட்டில் உட்கார்ந்து இருப்பான். எல்லோருக்கும் இந்த மச்சம் வாய்ப்பதில்லை.

இந்த ஜெய் பயல் இன்று என்னை வரச்சொல்லி இருந்தான். இன்று தான் இந்தியா சென்று திரும்பி இருந்தான். கண்டிப்பாக விமான நிலையத்தில் இருந்து ட்யூட்டி ஃப்ரீ சரக்கு வாங்கி வந்திருப்பான். எனவே நாளை அலுவலகத்திற்கு மருத்துவ விடுப்புதான் போடப்போகிறேன்.

இவனுக்கு அரசல் புரசலாக சில தொடர்புகள் உண்டு. முன்பொரு நாள், அலுவலகத்தில் அவன் அருகில் இருந்த பெண் மருத்துவ விடுப்பில் இருந்த போது இவனை போனில் அழைத்து வீட்டிற்கு வரச்சொன்னாளாம். இவன் தகுந்த முன்னேற்பாடுகளுடன் அவள் வீட்டிற்கு செல்ல, அவள் வீட்டில் யாரும் இல்லையாம். வீடு திரும்ப மாலை ஆகிவிட்டது என்றான் ஒரு நாள் போதையில்.

இப்போது அலுவலகம் மாறிய பின் ஒரு இந்தியப்பெண்ணுடன் சுற்றிக்கொண்டிருக்கிறான். இந்த முறை இவள் இல்லாமல் தன்னால் இருக்க முடியாது இவளை திருமணம் செய்து கொள்வேன் என்று கூறிக்கொண்டிருக்கிறான். இந்த பெண் ஏற்கனவே ஒருவனுடன் திருமணம் செய்யாமல் இருந்து, சக்கையான பின் அவன் சாதுர்யமாக விலகிவிட்டான். அன்புக்கு ஏங்கிக்கொண்டிருந்த போது இவன் சிக்கியிருக்கிறான். இவனும் எப்படி மடங்கினானோ தெரியவில்லை. ஆனால் வசமாக சிக்கி இருக்கிறான். இதை சொல்லும்போது அவன் கையில் மீன், சில பூ படங்கள் நீல நிற பால்பாயிண்ட் பென்னால் வரையப்பட்டிருந்தன. அவை அந்த பெண்ணால் வரையப்பட்டிருக்கலாம் என்று நினைத்தேன் பூ சற்று மென்மையாக இருந்தது

ஒருவேளை அந்த பெண் பற்றி வீட்டில் பேசியிருக்கலாம் ஏதாவது நடந்திருக்கலாம். ஹூம்ம்ம் இந்த 5 நிமிட பயணத்திற்குள் எத்தனை விஷயங்களை அசை போடுகின்றது மனது.

பாட்டிலை திறக்கும் முன் விஷயத்தை திறந்தான் ஜெய்.

“எனக்கு வீட்டில கல்யாண ஏற்பாடு பண்ணிருக்காங்க டா.”

“என்னடா சொல்ற, அப்ப அந்த கையில பூ படம் போட்ட பொண்ணு?” என்றேன் லேசான அதிர்ச்சியுடேன்.

”அதுதான்டா எனக்கும் கவலையா இருக்கு. கல்யாணம் பண்ணிகிட்டு வந்ததுக்கப்புறம், ஏதும் பிரச்சினை பண்ணக்கூடாது இல்ல”

“அடப்பாவி, அப்ப அவள கழட்டிவிடப்போறியா?“

“டேய் அப்படிலாம் சொல்லாதடா, அவ பாவம்டா. ஆனா அவளுக்கு யாராச்சும் கிடைச்சா பரவாயில்ல, அவ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிற டைப் தான்”

“என்னடா சொல்ற? வீட்டில இந்த பொண்ண பத்தி பேசலையா?”

“இல்லடா, ஒரு நல்ல கவுண்டர் பொண்ணு ஃபோட்டோ கொடுத்தாங்க, வீட்டில செம வசதி. பொண்ணும் குத்துவிளக்கு மாதிரி இருக்கு”

“இந்த பொண்ணுக்காக நீ கவலைப்பட்டா, பேசாம இந்தியாவே போய்டு. அங்க உனக்கு 75,000 சம்பளம் கொடுக்க ரெடியா இருக்காங்களே”

“இல்லடா, இந்த பொண்ணு வீட்ல நான் சிங்கப்பூர்ங்கறதால தான் பொண்ணே கொடுக்கறாங்க”

“சுத்தம். இப்போ என்னடா பண்றது."

"அதுதான்டா எனக்கும் தெரியல. பேசாம் இந்த பொண்ண நீ பாத்துக்கறியா?”

“அட நாயே என்னடா சொல்ற?”

“இல்ல மச்சி, பொண்ணு நல்ல பொண்ணுடா, நல்லா செலவு பண்ணும், ரொம்ப ஃப்ரெண்ட்லி. சோசியல் டைப் புரியுதா” இந்த புரியுதா என்ற இடத்தில் சற்று அழுத்தம் அதிகம் காட்டினான் ஜெய்.

“போடா இவனே, இதெல்லாம் கேவலமா இல்லயா?”

“டேய் நீ ஏன்டா இவ்ளோ பொங்கறே? சும்மா ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பிப்பார்”

“ஆள விடு சாமி. நானாவது நல்லாயிருக்கேன்”

“ஓகே ஒகே டென்சன் ஆகாதடா. வந்த வேலையைப்பார்ப்போம்”

2 நாட்கள் ஆகியிருக்கும். ஒரு இரவு போனில் அழைத்து, “நான் அவகிட்ட எல்லாம் சொல்லிட்டேன்” என்றான்

“என்னடா சொன்னா அவ?”

“கொஞ்ச நேரம் அமைதியா இருந்தா. அப்புறம் அவகிட்ட நான் வாங்கியிருந்த 500$ பணம் கேட்டா”

“எப்படியோ பிரச்சினை முடிஞ்சா சரி”

“ஆனாலும் அவ பாவம்டா. முடிஞ்சா அவளுக்கு ஒரு எஸ் எம் எஸ் அனுப்பிபாருடா. அவ நம்பர் உன்கிட்ட இருக்கு தானே. இப்படிதான் நானும் எஸ் எம் எஸ் அனுப்பி பிடிச்சேன்”

“போடா வெண்ண. வேலையப்பாரு போய்”

பெண் நல்ல அழகாகத்தான் இருப்பாள். சரி ஒரே ஒரு எஸ் எம் எஸ் அனுப்பித்தான் பார்க்கலாமே என்று அனுப்பும்போது எனக்கு தெரியாது, அவள் அன்றிரவு தற்கொலை செய்துகொள்வாள் என்றும் அடுத்த நாள் காலையிலேயே போலீஸ் என்னை வந்து விசாரிக்கும் என்றும்
----o0o----

இதை இலங்கை அரசு பிரத்தியேகமாக இந்திய அரசியல்வாதிகளுக்காக பிரணாப் முகர்ஜியிடம் கொடுத்தனுப்பி உள்ளது. இது இந்த சமயத்தில் நம் அரசியல்வாதிகளுக்கு நல்ல உபயோகமாக இருக்கும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஈடாக சில பல பீரங்கிகளும் பரிமாற்றப்பட்டுள்ளன.

இது தான் அந்த பரிசு.


இந்தோ இந்த படத்தில் இருப்பது தான் ஒருவகை ஃபிடில்.



இலங்கையில் தமிழர்கள் எரிந்துகொண்டிருக்கும்போது, அவர்களது சதை பொசுங்கும் சமயத்தில் இதை வாசியுங்கள்.

வரலாறு திருத்தி எழுதப்படும். இலங்கை தமிழர்கள் எரிந்த போது பிடில் வாசித்தது இந்திய அரசாங்கம் என்று.

இந்த வீடியோவை மென்மனதுக்காரர்கள் பார்க்கவேண்டாம்.







ஆபரேஷன் என்டெபி

ஜூன் 27, 1976ல் இஸ்ரேலில் இருந்து ஏதென்ஸ் வழியாக சென்றுகொண்டிருந்த பாரிஸ் சென்றுகொண்டிருந்த ஏர் ஃப்ரான்ஸ் விமானத்தை 2 பாலஸ்தீனிய தீவிரவாதிகள் உகாண்டாவிற்கு ஒரு போண்டா போல் கடத்திச்சென்றனர். அதை இஸ்ரேல் சமாளித்தவிதம் ஒரு த்ரில்லர் திரைப்படத்திற்கு இணையானது. இந்த சமயத்தில் இதை பதிவது காஸா விஷயத்தில் இஸ்ரேலுக்கு மல்லுக்கட்டுவது போல் ஆகிவிடக்கூடும் தான் இருந்தாலும். எல்லாவற்றையும் மக்கள் எப்போதும் மறந்துவிடுபவர்கள் என்பதால் தொடர்கிறேன்

ஏர் ஃப்ரான்ஸ் 139 விமானம் இஸ்ரேலில் இருந்து ஜூன் 27, 1976ல் பாரிஸ் கிளம்பியது. 246 பயணிகளும் 13 விமானக்குழுவும் இருந்த அந்த விமானம் இஸ்ரேலில் இருந்து கிளம்பியதும் கடத்தப்பட்டது. இந்தியா என்றால் பாகிஸ்தான் என்பது போல், இஸ்ரேல் என்றால் பாலஸ்தீனர்கள். இந்த விமானத்தை கடத்தியதும் 2 பாலஸ்தீனர்கள் மற்றும் 2 ஜெர்மானியர்கள் அடங்கிய ஒரு குழு. இந்த கடத்தலுக்கு உகாண்டா அதிபர் இடி அமின் உடந்தையாக இருந்திருக்கிறார்.

கடத்திய விமானம் முதலில் லிபியா கொண்டு செல்லப்பட்டது. அங்கு சுமார் 7 மணி நேரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. லிபியாவில் விமானத்திற்கு தேவையான எரிபொருள் நிரப்பி உகாண்டா செல்ல ஆயத்தமானது விமானம். இதற்கிடையில் ஒரு பெண் தான் கருவுற்றிருப்பதாகவும் அது கலைந்துவிட்டதாகவும் கூறி லிபியாவிலேயே இறங்கி தப்பித்ததும் நடந்தது.

பின் உகாண்டா சென்று சேர்ந்தது ஏர் ஃப்ரான்ஸ் விமானம். பிறகுதான் கட்த்திய தீவிரவாதிகள் தங்கள் வேலையைக் காட்டத்துவங்கினர். எதிர்பார்த்தபடி பணயத்தை அறிவித்தார்கள். ஆனால் அது கிட்டத்தட்ட நடக்க இயலா விஷயமாகவே இருந்தது. அவர்கள் கேட்டது.

  • இஸ்ரேலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 40 பாலஸ்தீனர்களை விடுவித்தல்
  • கென்யா, ஃப்ரான்ஸ், சுவிட்ஸர்லாந்து, மேற்கு ஜெர்மனி ஆகிய நாடுகளில் அடைத்துவைக்கப்பட்டுள்ள 13 தீவிரவாதிகளி விடுவிப்பது

இந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொள்ளாவிடில், ஜூலை 1 முதல் பயணிகளை கொன்றுவிடப்போவதாக அறிவித்தனர். இடையில் உள்ள நாட்கள் 3. ஆனால் இதில் எதிர்பார்க்காத மற்றொரு முகத்தையும் காட்டினர் கடத்திய தீவிரவாதிகள். யூதர்களையும், யூதர் அல்லாதவர்களையும் தனியாக பிரித்தனர். இது ஒன்றே போதுமானதாய் இருந்தது, கடத்தப்பட்டவர்களின் திகிலூட்ட‌.

ஒரு வழியாக பயணிகளை வெளியேற்ற ஒப்புக்கொண்டனர். ஆனால் யூதரல்லாதவர்களையும் விமானக்குழிவையும் மட்டும். என்டெபியில் இதற்கென தயாராக இருந்த மற்றொரு ஏர் ஃப்ரான்ஸ் விமானத்தில் இவர்களை ஏற்றிச்செல்ல முடிவெடுத்தனர். விமானததின் கேப்டன் மைக்கேல் பகோஸ், "இந்த விமானத்தின் அனைத்து பயணிகளும் என் பொறுப்பு. அவர்களின்றி நான் செல்ல மாட்டேன்" என்றார். மற்ற விமானக்குழுவினரும் இதை ஆமோதித்தனர். ஒரு ஃப்ரெஞ்சு கிறிஸ்தவ கன்னிகாஸ்திரியும் செல்ல மறுத்து தனக்கு பதிலாக வேரொறுவரை வெளியேற்றுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் உகாண்டா வீரர்கள் அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இப்போது விமானத்தில் இருந்தது 80 யூதப்பயணிகளும் 20 மற்றவர்களும்.

இதற்கிடையில் நம்மூரைப்போல் செயற்குழு, பொதுக்குழு, பிரதமருக்கு தந்தி, ஜனாதிபதிக்கு கடிதம் ஏதும் இல்லாமல், இஸ்ரேல் அரசு வேறொரு வேலையில் மும்முரமாக இருந்தது. ஜூலை 1ம் தேதி நெருங்கிவிட்டதால், இஸ்ரேல் அரசு இன்னும் கொஞ்சம் அவகாசம் கேட்டது. அதாவது ஜூலை 4 வரை ஒத்திவைக்குமாறும், தாங்கள் பரிசீலித்துக்கொண்டிருப்பதாகவும் கூறியது. இந்த நேரத்தில் உகாண்டா அதிபர் இடி அமினும் ஒரு அரசுமுறைப்பயணமாக மொரீஷியஸ் வரை செல்ல வேண்டி இருந்ததால் அவர், அந்த தீவிரவாதிகளை ஒத்திவைக்கும்படி கேட்டுக்கொண்டார். கிடைத்த இந்த 3 நாட்களை கொண்டு ஒரு ஆபத்தான திட்டத்தில் இறங்கியது இஸ்ரேல்.

இஸ்ரேல் ராணுவத்தின் Yekutiel "Kuti" Adam, Matan Vilnai, ,Brigadier General Dan Shomron அடங்கிய படை ஒன்று திரட்டப்பட்டது. அந்த படை தீட்டிய திட்டம் ஆபரேஷன் என்டெபி. திட்டம் என்னவென்றால் இஸ்ரேல் ராணுவ விமானங்கள் திருட்டுத்தனமாக உகாண்டாவின் என்டெபிக்குள் நுழைந்து பணயக்கைதிகளை காப்பாற்றுவது. இது கிட்டத்தட்ட அசாத்தியமான ஒரு விஷயம். ஏனென்றால் இஸ்ரேலுக்கு கிடைத்த உதவிகள் அப்படி.

  • இஸ்ரேல் தனக்கு அருகாமையில் இருக்கும் அனைத்து நாடுகளுடனும் சண்டையில் இருந்தது. நல்ல காலத்திலேயே அண்டை நாடுகள் எப்போதும் உதவுவதில்லை. இதில் பிரச்சினையில் இருக்கும்போது கேட்கவே வேண்டாம்.
  • எனவே இஸ்ரேலின் முதல் சவால், அண்டை நாடுகளின் வானத்தை விமானப்பயன்பாட்டுக்கு உபயோகிக்காமல் இருக்கவேண்டும்.
  • அவ்வளவு தூரம் சென்று மீண்டும் இஸ்ரேல் திரும்ப எரிபொருள் கட்டாயம் பத்தாது. எந்த நாடும் எரிபொருள் நிரப்ப அனுமதிக்காது. மேலும் இந்த ஆபரேஷன் ஒரு மிக ரகசியமான ஒரு விஷயம்.
  • என்டெபியில் விமான ஓடுதளத்தை அவர்கள் உதவியின்று பயன்படுத்த வேண்டும். என்டெபி விமானநிலையம் ராணுவத்தால் பாதுகாக்கப்பட்டதால் இதுவும் அவ்வளவு எளிதல்ல.

இத்தனை சவால்களையும் மீறி விமானநிலையத்துக்குள் நுழைந்தாலும், அவர்களை எப்படி தேடுவார்கள் என்கிறீர்களா? அங்குதான் இருந்தது ஒரு அல்வாத்துண்டு போன்ற ஒரு விஷயம். உகாண்டாவின் என்டெபி விமான நிலையத்தை வடிவமைத்து கட்டியது ஒரு இஸ்ரேலிய கம்பெனி. இது போதுமே, அனைத்தையும் முடிக்க. கிட்டத்தட்ட அந்த கம்பெனியிடம் இருந்து வடிவமைப்பைப் பெற்றுத்தான் இந்த திட்டமே தீட்டப்பட்டது எனலாம். அந்த வடிவமைப்பைக்கொண்டு இஸ்ரேலில் ஒரு மாதிரி அமைத்து அங்கு ஒரு சோதனை செய்து பின்னரே களத்திற்கு கிளம்பினர்.

முதல்கட்டமாக அவர்கள் தேர்ந்தெடுத்த பாதை, கிட்டத்தட்ட 100 அடிக்குள்ளான உயரத்தில் செங்கடல் வழியாக எகிப்து, சூடான் மற்றும் சவுதி அரேபியாவின் ரேடார் பார்வையில் இருந்து தப்பித்தது. பின் செங்கடல் இறுதியில் வலதுபுறம் திரும்பி ஏடென் வழியாக கென்யாவின் நெய்ரோபி விமானநிலையத்தை வந்தடைந்தன இஸ்ரேலிய ராணுவ விமானங்கள். அங்கிருந்து விமானங்கள் நேரடியாக என்டெபியை நோக்கி புறப்பட்டன.

என்டெபியில் கடைசியாக ஒரு மெகா நாடகத்தை நடத்தியது. என்டெபியில் முதலில் ஒரு விமானத்தை தரை இறக்கியது. சற்று முன் தரை இறங்கிய வேறு ஒரு விமானத்திற்காக போடப்பட்ட ஓடுபாதை விளக்குகளை பயன்படுத்தி இஸ்ரேலிய விமானம் இறங்கியது.

மொரீஷியஸ் சென்றிருந்த இடி அமின் வந்துவிட்டதைப்போல் தோற்றப்படுத்த, அவர் எப்போதும் பயன்படுத்தும் கருப்பு நிற மெர்சிடிஸ் கார் ஒன்று விமானத்தில் எடுத்துச்செல்லப்பட்டிருந்தது. அந்த காரை விமானத்தில் இருந்து தரை இறக்கி, அதில் இடி அமின் போல தோற்றம் கொண்ட ஒரு இஸ்ரேலிய கமாண்டோவை இருக்க வைத்து, பின்னால் சில கார்கள் புடைசூழ விமான நிலையத்தில் நுழைந்தது கார். உள்ளே இருந்த ராணுவம் இடி அமின் வருவதாக நினைக்க வைக்கவும், அவர்களுக்கு சுதாரிக்க நேரம் கொடுக்காமலும் இருக்க இந்த நடவடிக்கையை செய்தது இஸ்ரேல்.

ஆனால் விதி வேறு விதமாய் இரண்டு பாதுகாவலர்கள் ரூபத்தில் காத்திருந்தது. இஸ்ரேல் எடுத்து வந்திருந்தது கருப்பு நிற கார். ஆனால் மிக சமீபத்தில் இடி அமின் தனது காரை வெள்ளையாக மாற்றி இருந்தார். மேலும் தன் காருக்கு பின்னால் கார்கள் ஏதும் வரவேண்டாம் என்றும் உத்தரவிட்டிருந்தார். இதை நன்கு அறிந்த அந்த பாதுகாவலர்கள், வந்த காரை நோக்கிச்சுட்டனர்.

இது மற்றவர்களை உசுப்பிவிடாமல் இருக்கும் பொருட்டு, இஸ்ரேல் ராணுவம் உடனடியாக களத்தில் இறங்கியது. அவர்கள் முன்னரே போட்டு வைத்திருந்த திட்டப்படி அனைவரையும் அடித்து நொறுக்கி 30 நிமிடங்களில் அனைத்து பணயக்கைதிகளையும் காப்பாற்றி, விமானம் மீண்டும் கிளம்பி இஸ்ரேல் சென்றது. வழியில் முன்புபோல் கென்யாவில் இரு நிறுத்தம் போட்டுவிட்டு சென்றது.

இந்த மீட்புப்பணியில் ஒரே ஒரு இஸ்ரேலிய கமாண்டோ மட்டும் உயிரிழந்தார். பணயக்கைதிகளில் 3 பேர் இறந்தனர்.

உகாண்டா தரப்பில் 45 ராணுவ வீரர்கள் பலியாயினர். மேலும் 15 மிக் 17 ரக விமானங்களும் வீழ்த்தப்பட்டன.

பின்னர், இந்த கடத்தல் சம்பவத்தில் இஸ்ரேலின் உளவு அமைப்பும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் ஒரு வதந்தியை பிரிட்டன் கிளப்பியது. ஆனால் இஸ்ரேல் அதை மறுத்தது.

இந்த சம்பவம் கமாண்டோ படைகளுக்கு ஒரு முன்னுதாரணமாக காண்பிக்கப்படுகின்றது.

இவ்வளவு தூரம் படிச்சதுக்கு நன்றி. கீழே உள்ள சுட்டிகள் மூலம் தான் இந்த விஷயங்களை நான் தெரிந்துகொள்ள முடிந்தது. அவர்களுக்கும் நன்றிகள்

http://www.ynet.co.il/english/articles/0,7340,L-3269662,00.html
http://en.wikipedia.org/wiki/Operation_Entebbe
http://www.palestinefacts.org/pf_1967to1991_entebbe.php
http://www.youtube.com/watch?v=ffRQ6e29Dw0 and the following serious

மிஷன் சக்ஸஸ் தமிழர்கள் கூண்டோடு அழிந்தனர்.

இந்த செய்தியைத்தானே எதிர்பார்க்கிறது இந்திய அரசு.

தஜகிஸ்தானில் இந்திய ராணுவநிலை வைக்க முடிகிறது, ஆப்கன் போருக்கு மருந்தளிக்க முடிகிறது. இங்கு கூப்பிடு தூரத்தில் நிகழும் இனஒழிப்பை கைதட்டி ரசிக்கிறது.

தமிழக அரசு என்னவென்றால் தீர்மானங்களும், கடிதங்களும் போட்டுக்கொண்டிருக்கிறது.

கீழ்வரும் நன்மைகளை நினைத்தாவது திமுக, தன் குரலை ஓங்கி ஒலிக்கச்செய்யவேண்டும்

  • இலங்கையில் தமிழர்கள் உயிருடன் இருந்தால்,
  • சன்டிவி கேடிவி பார்ப்பார்கள். காசு கிடைக்கும்.
  • கப்பல் தொழிலுக்கு உதவுவார்கள்
  • தமிழகத்தில் உங்களுக்கு ஓட்டு அரசியலுக்கு வசதியாக இருக்கும்
  • கண்டிப்பாக மனிதநேயம் கொண்டவர்களால் ஓட்டு எண்ணிக்கை அதிகரிக்கும்
  • கவிதை எழுதினால் அதை ஈழத்தமிழர்கள்(மட்டுமாவது) ரசிப்பார்கள், பாராட்டுவார்கள்.
  • குடும்பத்தோடு சுற்றுலா செல்ல நல்ல இடம் கிடைக்கும்

என்ன எல்லாம் கேணைத்தனமா இருக்கா? நம் அரசு செய்வதைவிடவா?

ஈழத்தமிழர் விஷயத்தில் எனக்கு இந்த அரசு மீது நம்பிக்கை இல்லை, இது தொடர விருப்பம் இல்லை. எனவே இந்த தேர்தலில் என் வோட்டு மட்டுமல்லாது என்னை சார்ந்திருக்கும் சில ஓட்டுகளையும் இந்த அரசு இழக்கிறது.

நீங்களும் இதே மனப்பான்மையோடு இருந்தால், தயவுசெய்து வலப்பக்கம் இருக்கும் பட்டையில் ஓட்டளியுங்கள்.
உங்கள் ஓட்டு இந்த தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிராக இருக்கட்டும் ஈழத்தமிழர் விவகாரத்தில் அரசு நல்ல முடிவு எடுக்கும் வரை.

இந்த ஓட்டு உங்களுக்கு புலி ஆதரவாளர் என்ற முத்திரை குத்தாது. நம் இனம் அழிகின்றதே என்ற வேதனையை பதிவு செய்யும்.

இந்த ஓட்டு உங்களை மற்ற கட்சி ஆதரவாளர்களாக்காது. மாற்றாக ஆளுங்கட்சிகளுக்கு உங்கள் ஓட்டு வலிமையை உணர்த்தும்.

நம் கருத்துக்களை அரசுக்கு சொல்ல ஒரே வழி, அவர்கள் மொழியில் பேசுவதுதான். பணக்காரனிடம் பணம் பற்றி பேச வேண்டும். அரசியல்வாதிகளிடம்(தேர்தல் சமயத்தில்) ஓட்டு பற்றி பேச வேண்டும்

அதிகம் கணினியில் வேலை செய்வதை விட, கணினியில் படிப்பது கண்ணை மிக சோர்வாக்கும்.

எனக்கு கடந்த சில நாட்களாக கண் எரிச்சல் உண்டாகி ஃபிகர்கள் சரியாக தெரியாமல் போய் சிரமப்பட்டு வருகின்றேன்.

இருந்தாலும் எப்படியும் படித்துவிட வேண்டும் என்ற உந்துதலில் தேடிய போது கிடைத்தது இந்த ஃபயர்ஃபாக்ஸ் ஆட் ஆன்.

எந்த நிறத்தில் திரை இருந்தாலும் அதை ஒரே சொடுக்கில் கருப்பு பின்புலமாகவும், வெண்ணிற எழுத்து நிறமாகவும் மாற்றி எளிதில் படிக்க வழி செய்கிறது. இந்த அமைப்பை நம்மால் மாற்றிக்கொள்ளவும் இயல்கிறது

ஆனால் இது செயல்பாட்டில் உள்ள போது சில இடங்களில் தட்டச்சுவது சிரமமாக இருக்க வாய்ப்புள்ளது.

எனினும், சிறந்த ஒரு ஆட் ஆன்.

https://addons.mozilla.org/en-US/firefox/addon/7166

தமிழில் அறிவியல் பற்றி ஏற்கனவே சில தளங்கள் இருந்தாலும், அவை கொஞ்ச நாட்களில் ஆர்வமிழந்துவிடுகின்றன. அடிக்கடி அப்டேட் செய்வதில்லை.

இன்று பத்ரி மூலம் கிடைக்கப்பட்ட தளம் http://www.ariviyal.info

ஏற்கனவே அவரது முயற்சிகள்/கணித பதிவுகள் அறிந்ததே. இந்த புது முயற்சியில் அவருடன் வெங்கடரமணன் மற்றும் அருண் ஆகியோரும் எழுதுகின்ற‌னர்.

"அறிவியல் ஒரு சமுத்திரம். அறிவியல் சார்ந்த விஷயங்களில் எங்களுக்கு ஓரளவிற்கு புரிந்தவற்றை உங்களுடன் தமிழில் பகிர்ந்துகொள்ளும் முயற்சி இது." என்று கூறியிருக்கிறார்கள்.

நல்வருகை


வலி

வார்த்தைகள் தொடங்கும் அந்த ஆரம்பப்புள்ளியில் வலிக்கிறது
எனக்கும் சற்று புதிதாகத்தான் இருக்கிறது இந்த வலி.
மருத்துவருக்கு சொல்லி புரியவைப்பதற்குள் மீண்டும் வலிக்கிறது

எல்லாம் ஆரம்பித்தது இந்த வார்த்தைகளை எண்ண ஆரம்பித்ததும்தான்
வார்த்தைகளின் எண்ணிக்கையும் ஒரு வார்த்தையாகி வலியைக்கூட்டுகின்றது
வார்த்தைகளை குறைத்துத்தான் ஆகவேண்டும் போல இருக்கின்றது

எப்படி இருந்தாலும்
வலி என்ற வார்த்தைக்குள் இருந்து துவங்கிவிடும் மீண்டுமொரு வலி


பதிவுலகம் மொக்கைகளால் நிரம்பியிருக்கின்றது என்றால் அது மிகை அல்ல. நானும் அம்மாசுக்கு ஒரு காரணமாக கண்டிப்பாக இருந்திருப்பேன் என்ற குற்ற உணர்வோடு இதை எழுதுகிறேன்.பதிவுகளுக்கு எல்லை இல்லை, எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதலாம் என்ற எண்ணத்தோடு தீவிரமான மொக்கைகளோடு சில பதிவுகள்/இடுகைகள் வருகின்றன. கண்டிப்பாக எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதலாம்தான். ஆனால் பயன் என்பது முக்கிய அம்சம்.


ஈமெயிலில் சொல்ல வேண்டிய கருத்துக்களை பதிவிட்டு கொண்டு சென்ற நம் அலட்சியம்தான் இன்று ட்விட்டரில் "உங்க வீட்டில் என்ன குழம்பு" என்பது வரை கொணர்ந்துவிட்டிருக்கிறது. பதிவுலகம் கண்டிப்பாக நண்பர்கள் உருவாகும் இடம்தான். ஆனால் இன்று நண்பர்களாக இருந்து கொஞ்ச நாள் கழித்து சண்டை போட்டுக்கொள்வது, பதிவுலக அரசியல் என்று புதிய வார்த்தை வந்தது என்று பல பிரச்சினைகளை உருவாக்கும் இடமாகவும் உள்ளது.


பதிவுகளில் சுய புராணங்கள், பதிவர் பட்டத்திற்கு எழுதுவது போன்றவற்றை சற்று குறைத்துக்கொள்வது நல்லது. எழுத்தின் பலம் நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். எல்லோராலும் சுஜாதா போல் எழுத முடியாது, எழுதினாலும் படிக்க ஆளிருக்காது. சமூக அக்கறையுடன் இந்த சுதந்திரத்தை பயன்படுத்துவது சிலருக்காவது பலனளிக்கும்.


தயவு செய்து அடிதடிகளை குறைத்துக்கொள்ளுங்கள், எதிர்பதிவுகளையும் குறைத்துக்கொள்ளுங்கள்(அதற்கு பதில் ஒரு பின்னூட்டமோ அல்லது மின்மடலோ எழுதிடுங்கள்) இல்லையேல் அது உங்களின் விளம்பரத்தன்மையயே காட்டும். சில விஷயங்கள் இதற்கு விதிவிலக்கு. உதாரணமாக, ஒரு பதிவர் ஒரு தவறான விஷயத்தை பிரசாரம் செய்யும் போது அதை எதிர்த்தி பதிவிடலாம். இதன் மூலம் உண்மை தெரிய வரலாம்.


தனிநபர் தாக்குதல் அறவே வேண்டாம். அதற்கு பல இடங்கள் உள்ளன.


ஏடாகூடமான தலைப்புகள் வேண்டாம். அப்படிதான் நீங்கள் படிக்க வைக்கவேண்டும் என்றால், பிகேபி, கிறுக்கல் போன்ற‌ பதிவுகளை பாருங்கள். எத்தனை வாசகர்கள். அவர்கள் கண்டிப்பாக தலைப்பில் ஈர்க்கப்பட்டு சேர்ந்த கூட்டம் இல்லை.


மேலும் நாம் அனைவரும் எழுதுவது ஒரு சுய அரிப்பை போக்கிக்கொள்ளவும், என்றாவது நம் திறமையும் பேசப்படுமா என்பதற்காகத்தான். அதற்கான முயற்சிகள் மொக்கைப்பதிவுகளால் கண்டிப்பாக வராது.


தமிழ்மணத்தின் சூடான இடுகைகள் பற்றிய விவகாரத்தில் நான் கண்டிப்பாக தமிழ்மணத்தை ஆதரிக்கிறேன்.


அதே போல் தமிழ்மணம் தன் டெம்ப்ளேட்டை மாற்றியபோது, அனைத்து இடுகைகளையும் முழுமையாக முதற்பக்கத்தில் காட்டியது. அது ஒரு நல்ல முடிவு. அதையும் வீணாக எதிர்த்து நிறுத்தினார்கள்.


சற்று யோசித்துப்பார்த்தால், கூகுள் ரீடரில் காட்டுவதைவிடவா தெளிவாக காட்டியது தமிழ்மணம்? அலுவலகங்களில் வலைப்பதிவுகள் பார்க்கவும் கூகுள் ரீடரும் பார்க்க வழியில்லாதவர்களை உங்கள் பதிவு போய் சேர்ந்திருக்கும். அதற்கும் வழியில்லாமல் போனது.


ஆகவே இறுதி வரியை மட்டும் படிக்கும் நண்பர்களுக்கு:உங்கள் பதிவுகள் சற்றாவது பலனளிக்கும் விதத்தில் இருந்தால் நன்று.


இதைச்சொல்ல நீ யாரடா என்று கேட்பவர்கள் கேட்டுக்கொண்டே இருக்கட்டும், தங்கள் காதுகளில்...

சாரு பற்றி யார் எனக்கு அறிமுகப்படுத்தியது என்று எனக்கு சரியாக நினைவில் இல்லை. ஆனால் எதேச்சையாக கூகுளில் சிக்கியதாக நினைவு. படிக்க ஆரம்பித்ததும் மிகவும் பிடித்துப்போய் தீவிரமாக படிக்கத்துவங்கினேன். ஏனென்றால் அதில் அப்படி ஒன்றும் கடினமானதாகவோ, உண்ர்வை பாதிக்கும் புனைவோ இல்லை. வெறும், மேலோட்டமான சற்று ஆர்வமான பத்திகளே. அதுவும் செக்ஸ் பற்றி வரும் பகுதிகள் யாருக்குத்தான் பிடிக்காது.

சாரு எழுதுவதில் பெரும்பான்மை தன்னை சுற்றி நடப்பதாக எழுதுகிறார். அவை புனைவும் உண்மையும் கலந்தவை என்கிறார். இதி புனைவு என்று நிறுவ, பெருமாள் தன் மனைவியிடம் மாட்டியதும் வரும் பகுதிகள், வெறும் வறட்டு புனைவாக இருந்ததை அறியலாம். தன்னை சுற்றி நிலவிய கதாபாத்திரங்களை பற்றி ஒன்றொன்றாக கதை அளக்கத்துவங்கியது ஒரு அறிகுறி. உச்சகட்டமாக தன்னைக்கொல்ல ஒரு கதாபாத்திரம் துப்பாக்கியை இன்டென்ஷனலாக வைத்துவிட்டு சென்றது காமெடியின் உச்சகட்டம்.

சாருவின் மேற்கோள்கள் பற்றி ஒரு ஆய்வே நடத்தலாம். அவரைப்பொறுத்தவரை அவரது விருப்ப எழுத்துலகம் ஸ்பானிஷ், ஃப்ரெஞ்சு, கூபா போன்ற சில நாடுகளைச்சுற்றியே இருக்கின்றன. சில பல தமிழ் எழுத்தாளர்களும் அவரை பாதித்திருப்பது தமிழுக்கு கிடைத்த மதிப்பு.

சாருவின் சில தபாலக கதைகள் ருஷ்ய சிறுகதைகளுக்கு சற்றும் குறைவில்லாமல் இருக்கின்றன. ஆனால் அதிகம் பயன்படுத்தாமல் வேறு சில இடங்களில் அதை விரயம் செய்கிறார். அதைத்தவிர்த்து அவரது மிகப்பெரிய பிரச்சினை, ஒரு எழுத்தாளனுக்கு புனைவுக்கு கற்பனை இருக்கவேண்டும் அது சாருவிடம் இல்லை.. ஒரு பெண்ணைப்போல் அவரிடம் ஒரு 1 மாதம் சாட் செய்தால் அவரது அடுத்த புத்தகத்திற்கு மனுஷ்யபுத்திரன் தயாராகலாம். கற்பனை இல்லாவிடில், ஆழ்ந்து கவனிப்பு வேண்டும். அவரது கவனிப்புகள் வெறும் 5ஸ்டார் பார்களுக்குள்ளேயும், சில செக்ஸ் விஷயங்களிலுமே இருக்கின்றது(இந்த விஷயத்தில் யாரும் விதிவிலக்கல்ல. மேலும் அவரது படைப்புலகம் அவரது கம்ஃபர்ட் ஸோனுக்குள் மட்டுமே இருக்கின்றது. இந்த விஷயம், வரலாற்றில் அவருக்கான இடத்தில் வேறொருவர் துண்டு போட்டுவிடும் அபாயத்தை ஏற்படுத்துகின்றது.

அவரது எழுத்தில் மகுடியாக மயங்கும் அளவிற்கு சிலர் பேசுவது, அவர்களது ரசனையையும், மற்ற எழுத்தாளர்களை கேலிக்குள்ளாக்குவதாகவும் உள்ளது.

சாருவின் சில உலகப்படங்கள் மற்றும் இசை பற்றிய எழுத்துகள் எல்லாம் ஏதோ மொழிபெயர்ப்பு போல இருக்கின்றது. இசையோ படைப்போ ஒரு பாதிப்பை ஏற்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் சாரு எழுதும்போது ஒருவித அந்த விஷயம் விடுபட்டுப்போகின்றதாக நான் உணர்கின்றேன்.

சாருவின் கதாபாத்திரங்களை ஏணி மீது ஏற்றுவதும், கொஞ்சம் சறுக்கினால், கீழே போட்டு மிதிப்பதுமாய் உள்ள மனபாவம் எரிச்சலை ஏற்படுத்துகின்றது. கேரளாவில் அவரது புகழ் பற்றி சொல்லிக்கொண்டு இருக்கின்றார். அங்கு அவரை எப்படி கருதுகிறார்கள் என்பது பற்றிய ஜெயமோகனின் மதிப்பீடு உண்மையாக இருக்குமோ என்று அஞ்சுகிறேன்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதாவின் கார் தாக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி வந்திருக்கிறது,

இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில், தாக்கியவர்கள் கண்டிப்பாக வழிப்பறி செய்பவ்ர்களாக இருக்கமாட்டார்கள். கண்டிப்பாக ஏதேனும் ஒரு கட்சியை சார்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.

என்னங்கடா மனசுல நெனச்சிகிட்டு இருக்கீங்க?

ஒரு கட்சி, எம்.எல்.ஏ பதவி இதெல்லாம் மக்களுக்கு சேவை செய்யறதுக்காக இருக்கணும் அத விட்டுட்டு ஏதோ காண்ட்ராக்ட் பிசினஸ் மாதிரி பண்ரதுக்கு, நீங்கள்ளாம் ___________ பொழைக்கலாம்.

மக்களுக்கு சேவை செய்யறதுக்கு இவ்வளவு அடிச்சுக்கறீங்களே ரொம்ப பெருமையா இருக்கு.

போலீஸ் என்ன செய்யுதுனு தெரியல, சம்பவத்தின் புகார் கூட எடுக்க மறுத்துவிட்டார்களாம்.

அமைச்சர்கள் இரண்டு வாரமாக இங்கு தங்கி ஓட்டு சேகரித்துவருகின்றனராம். உங்களை அமைச்சராக்கி அழகு பார்த்தத்ற்கு நல்ல முக்கியமான காரியம் செய்து கொண்டிருக்கிறீர்கள். நன்றிகள் பல.

கவிதை மட்டுமே எழுதும், தமிழினத்தலைவருக்கு குறிப்பிட்ட திசையில் இருந்து வரும் செய்திகள் கண்ணுக்கு தெரிவதில்லையாம், காதில் விழுவதில்லையாம். அவருக்கு உடல்நிலை குணமாக இறைவனை மனமாற ப்ரார்த்திக்கிறேன்.

சில கட்சிகள் செய்யும் வன்முறையை பார்த்தும், அவர்களுக்கு ஓட்டு போடும் மக்களை 24 மணி நேரமும் மின் தடை செய்தாலும் தப்பில்லை.

வாழ்க ஜனநாயகம்



Copyright 2006| Blogger Templates by GeckoandFly modified and converted to Blogger Beta by Blogcrowds.
No part of the content or the blog may be reproduced without prior written permission.