தமிழ்மணத்தின் ராசி நன்றாக வொர்க் அவுட் ஆகின்றது. சென்ற பதிவின் தலைப்பில் வெறும் ஜட்டி என்ற ஒரே ஒரு வார்த்தைக்காக ஹிட் காட்டுத்தனமாக ஏறிவிட்டது.

இனி கொஞ்சம் உஷாராக தலைப்பிடவேண்டும் என்று நினைக்கிறேன். எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பதை விட எந்த பதிவை ரசித்தார்கள் என்பதே முக்கியம் என்று நினைக்கிறேன்.

வர வர எதை பதிவிடுவது என்பது மிகப்பெரிய குழப்பமாக உள்ளது. கொஞ்ச நாளைக்கு தொழிற்நுட்பம் மற்றும் வரலாறு சம்பந்தப்பட்ட பதிவுகளை/மொழிபெயர்ப்புகளை இடலாம் என்று எண்ணியுள்ளேன்.

பதிவர் வட்டம் என்பது இன்னமும் எனக்கு பிடிபடாமல் தான் இருக்கின்றது. அதாவது, பதிவர் வட்டத்திற்காக எழுதுவது. எத்தனை பேர் அதை படிக்கிறார்கள் என்பதும், அது எத்தனை பேருக்கு புரியும் என்பதும் சற்று சந்தேகத்திற்கிடமான விஷயம் தான். மேலும் வரலாற்றில் இடம் பெறும்போது(கமென்ட் கோவிந்து: இது ரெம்ப ஓவர்) சற்று குழப்பங்களை ஏற்படுத்தலாம்.

மெயிலனுப்ப வேண்டிய விஷயங்களை பதிவிடுவதும், சாட் செய்ய வேண்டிய விஷயங்ளை ட்வீட் செய்வதும் அந்தந்த தொழிற்நுட்பங்களை அதற்கான பாதையில் இருந்து மாற்றிவிடும்.

புதிதாக டொமைன் வாங்கியிருக்கின்றேன். தற்போதைக்கு ரீடிரக்ட் செய்து வருகிறேன். புதிதாக தளம் வாங்கியபின் எல்லோரையும் போல் வேர்ட்ப்ரஸ்ஸுக்கு மாறிவிடுவேன். வேர்ட்ப்ரஸ் தரும் சுதந்திரம் தனிதான். ப்ளாக்கரைப்போல் புதிய xml வைத்து குழப்பாமல். தெளிவாக php இல் இருப்பது மிகப்பெரிய பலம்.

இந்த விவரங்கள் எல்லாம் பதிவுலகில் கொட்டை தின்று பழம் போட்டவர்களுக்கு இதெல்லாம் "என்னது இந்திராகாந்தி செத்துட்டாங்களா?" வகை மேட்டர். :)

சரி இந்த வாரம் வீக்கென்டில் சிங்கையில் சிங்கை தெற்காசிய முனைய பதிவர் சந்திப்பு !
நடைபெறவிருக்கிறது. பொதுவாக ஒரு கூட்டத்தில் கலப்பதென்பது எனக்கு எப்போதும் வேப்பங்காய் விஷயம். உடல்நிலை வேறு சற்று மோசமாக இருப்பதால், முடிந்தவரை முயற்சி செய்யலாம் என்று எண்ணியுள்ளேன்.

நிகழ்ச்சி பற்றிய தகவல்கள்:
நாள் : நவம்பர் 1, 2008
இடம் : செந்தோசா சுற்றுலாத்தலம் டால்பின் லகூன் கடற்கரை அருகில்
நேரம் : மாலை 4 - 8

கடைசியாக ஒரு ஹைக்கூவுடன்,

மீன்கடையில்
இறந்த மீனின் வாயில் விழுகின்றது
மழைத்துளி

Content is no longer available...

சிங்கப்பூர் வந்து நீண்ட நாட்கள் ஆனபின் திடீரென்று பழைய தமிழ் படங்களில் சிங்கை எப்படி இருந்தது என்று பார்க்க ஆவலுடன், பல படங்களையும் பாடல்களையும் பார்த்துக்கொண்டிருக்கின்றேன். அந்த வரிசையில் நினைத்தாலே இனிக்கும் படத்தில் இருந்து இப்பாடலை கேட்டேன்.

நிறைய முறை கேட்ட பாடல் தான், இருந்தாலும் அப்பாடலின் இசையும் பாடிய விதமும் துள்ளல் ரகம். எம்.எஸ்.வி பின்னி பெடலெடுத்திருக்கிறார்.

எஸ்.பி.பியும் தன் பங்கிற்கு பாடலை அட்டகாசப்படுத்தியிருக்கிறார். அழகான ஏற்ற இறக்கங்களுடன் அவர் பாடும் விதம் அருமை. குறிப்பாக, "மன்மதன் வந்தானா, சங்கதி சொன்னானா?" இடத்தை அவர் பாடும் போது, குரல் பல பரிணாமங்களை எட்டுகிறது.

தலைவர் ரஜினியின் ஸ்டைல் உச்சகட்டத்தில் இருக்கின்றது. அவரது ஸ்டைலும், டான்ஸும் அருமை. பிக கருப்பாக, எண்ணெய் ஒழுகும் முகத்தோடு இருந்தாலும், அட்டகாசமாக இருக்கிறார்.

ஏதோ லென்ஸ் ஃபில்டர் எல்லாம் போட்டு, கெடுத்து வைத்திருக்கிறார்கள் பாடலை. ஒருவேளை அந்தகால கிராஃபிக்ஸாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இப்படி இத்தனை துள்ளல்களோடு இருக்கும் இப்பாடலைப்பார்த்து ரசியுங்கள்.



இந்த முறை இந்திய பயணத்தின்போது(சிங்கப்பூரில் இருந்து) பல திட்டங்களோடு சென்றிருந்தேன். ஆனால் இறுதியில் ப்ராஜெக்டில் இருந்து வேலை வந்து விட்டதால், வீட்டை விட்டு வெளியே கூட செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளேயே மாட்டிக்கொண்டேன். ஆற்காட்டார் புண்ணியத்தில் கரண்ட் வேறு இல்லாத‌தால் ஏரியா விட்டு ஏரியா மாறி சென்று கொண்டிருந்தேன்(ஒவ்வொரு ஏரியாவிலும் ஒவ்வொரு நேரத்தில் கரண்ட் கட் செய்யப்படுவது மரபு)

இப்படிப்பட்ட நேரத்தில் நீண்ட நாட்களாக படிக்க எண்ணியிருந்த புத்தகங்களை படிக்க துவங்கினேன். சென்னை ஹிக்கிம்பாதம்ஸ் புத்தகக்கடையில் தமிழுக்கான பகுதி மிகக்குறைவாகவே இருந்தாலும் கிட்டத்தட்ட முக்கிய புத்தகங்கள்(நல்ல விளம்பரப்படுத்தப்பட்ட அல்லது பெரிய எழுத்தாளர்களின் புத்தகங்கள்) கிடைக்கின்றன. சென்ற முறை ராகுல் சாங்கிருத்தியாயனின் வால்கா முதல் கங்கை வரை கூட அங்கு தான் வாங்கினேன்

ஆனால் இந்த முறை சாருவின் ஸீரோ டிகிரியும், ராஸலீலாவும் வாங்க முடிவு செய்து சென்றேன். ஆனால் ஸீரோ டிகிரி கிடைக்கவில்லை. ராஸலீலா மட்டுமே கிடைத்தது. அருகிலேயே வாத்தியாரின் "ரத்தம் ஒரே நிறம்" புத்தகமும், ஆங்கிலத்தில் புகழ் பெற்ற ராபின் ஷர்மாவின் "The Monk Who Sold His Ferrory" தமிழாக்கம் "தன் பொக்கிஷத்தை விற்ற துறவி" புத்தகமும் கிடைத்தன.

வாங்கியவுடன் "ரத்தம் ஒரே நிறம்" புத்தகத்தை பிரித்து மேய்ந்தேன். ஆட்டோவில் வரும்போதே புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். இந்த புத்தகம் பற்றி ஏற்கனவே யாழிசை ஒரு இடுகை இட்டிருக்கிறார். வழிமொழிகிறேன்.

பிறகு ஆரம்பித்தேன் ராஸலீலாவை, கிட்டத்தட்ட 700 பக்கங்கள் கொண்ட புத்தகம் அது. இந்த புத்தகம் ஒரு திரைப்படம் பார்ப்பது போல்தான் இருந்தது. வெறித்தனமாக அந்த முழு புத்தகத்தையும் 1 நாளில் படித்து முடித்தேன். என் அம்மா, அப்படி என்னத்த தான் படிக்கிற? இதுக்கு தான் ஊரில் இருந்து வந்தியா? என்று அலுத்துக்கொண்டது வேறு கதை.

ஒரு டைரியை படிப்பது போலத்தான் இருந்தது இப்புத்தகம் படிப்பது. சாருவின் வித விதமான சம்பவங்களின் தொகுப்பு. அவரது தபால் அலுவலக வாழ்க்கை பற்றிய அவரது கதைகள், நீண்ட நாட்கள் முன்பு படித்த ருஷ்ய சிறுகதைகளை நினைவுபடுத்தின. நம்மை பெருமாளுடன் இணைத்து பார்க்கமுடிகிறது. இந்த பக்கங்களை படிக்கும்போதே ஏதோ அரசு அலுவலகத்திற்குள் நுழைந்தது போல் இருந்தது, அரசு அலுவலகங்களுக்கென்று ஒரு தனி வாசனை உண்டு. அந்த வாசனை படிக்கும்போது வந்தது.

பெருமாளிற்கு மட்டும் எப்படி இவ்வளவு நண்பர்கள் விதவிதமாக கிடைக்கின்றார்களோ தெரியவில்லை. ஹூம்ம்ம்ம்

பிற்பாடு வருகின்ற வித விதமான பெண்களும், அவர்கள் பெருமாளிற்கு அடிக்கின்ற ஆப்புகளும் முழுக்க முழுக்க எதார்த்தம். அதிலும் அந்த மலேசியப்பெண் இந்தியா வரும்போது சந்திக்கவில்லை என்பது பற்றி பெருமாளின் வருத்தங்கள், நான் இந்தியா சென்று நண்பர்களை கூட சந்திக்காமல் திரும்பி வந்த சம்பவங்களை நினைவுபடுத்தின. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித காரணங்கள் உண்டு. அது அவரவர்களுக்கு பொருத்தமானதாகவே தோன்றும். அடுத்தவர்களுக்கு அது தோன்றாததுதான் வாழ்க்கையின் எதார்த்தமான சுவாரசியம்.

பெருமாள் நல்ல சுகவாசியாகத்தான் இருந்திருக்கிறார், தற்கொலை செய்துகொள்ளும் அந்த அமெரிக்கப்பெண்ணைப்போல் நடைமுறையில் பல பெண்களை பார்க்கமுடியும். என்ன ஒன்று, முக்கால்வாசிப்பேர்ஆண்களை தற்கொலை செய்யத்தூண்டி விடுவார்கள்.

பிற்பாடு வந்து செல்லும் அந்த சி மேட்டர்களும், உலகவங்கி விவகாரங்களும் எனக்கு "Lock Stock and Smoking Barrels" படத்தை நினைவூட்டின.

ஆனால் புத்தகத்தின் எரிச்சலான விஷயங்கள் எங்கு பார்த்தாலும் மேலோங்கி இருக்கும் ஒரு ஆதிக்கத்தனம் மற்றும் மேதாவித்தனம் (போன்று காட்டிக்கொள்ள முயலும் ஒரு தன்மை). ஒரு down to earth approach இல்லாதது நாம் சில கதைகளோடு இணைவதில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன.

அடுத்த எரிச்சல், எங்கும் அடைத்திருக்கும், ஈமெயில் மற்றும் SMS களும். சில உறவுகளை கொண்டாடுவதும், அது முறியும் போது ஏறி மிதித்து அதன் மீது மூத்திரம் பேய்வதும் ஒரு வித சாடிசத்தை காட்டுகின்றது.

மொத்தத்தில் படிக்கவேண்டிய உணரவேண்டிய ஒரு படைப்பு, ஆனால் முழு புத்தகத்தையும் அல்ல என்பது என் அனுபவம்.

அடுத்த புத்தகமான "தன் பொக்கிஷத்தை விற்ற துறவி", இன்னும் நான் முழுதாக படித்து முடிக்கவில்லை. நான் படித்த வரையில் ஓரளவிற்கு நன்றாக இருக்கின்றது. ஆனாலும் ஆங்கிலத்தில் படிக்கும் போது இருந்த ஒரு கவர்ச்சி இந்த தமிழ்நடையில் இல்லை.

மேலும் புத்தகத்தின் லேஅவுட் கண்றாவியாக உள்ளது. ஃபான்ட் படிக்கத்தூண்டாமல், புத்தகத்தை மூடத்தூண்டுகின்றது. ஹும்ம்ம்ம் படித்துப்பார்த்து சொல்கிறேன்.


வால் நட்சத்திரம் பாடல்கள்

ஏற்கனவே நாம் கேட்டு ரசித்த, ஹிந்தி பாடல்களின் தமிழாக்கம் தான்.

அதே ஷங்கர் மஹாதேவன் பாடல்கள். என்ன இந்த முறை பாடல் வரிகள் அவருக்கு சுதந்திரத்தை சற்று குறைத்தது போல் தோன்றுகின்றது. குறிப்பாக "இரயில் பயணங்கள்" பாடலில் என் அம்மா வரிகள் வரும் இடங்கள், ஹிந்தியின் "மேரி மா" போல் அழுத்தமாக இல்லாதது போல் ஒரு உணர்வு.

எனக்கு இந்த முறை பிடித்த பாடல், "பம்பம் பாடு" பாடல், அமீர்கானின் அதே ஆரம்ப பாடலை வைத்துக்கொண்டு அட்டகாசமாக ஆரம்பிக்கின்றது பாட்டு. துள்ளல் சற்றும் குறையாமல் செல்வது மிகப்பெரிய பலம் இப்பாடலுக்கு.

"தொடுவானம்" பாடல் மிக அருமை. அட்டகாசமான பாடப்பட்டுள்ளது.

எல்லா பாடல்களும் நன்றாகவே உள்ளன. :)

ஆக மொத்தத்தில் கடையில் கொஞ்சம் சாப்பிட்ட குலாப் ஜாமூனை வீட்டில் அம்மா செய்தது போல் இருக்கின்றது. அடித்து தூள் கிளப்பலாம்.

இப்படம் தமிழ்நாட்டின் மூலை எங்கும் சென்று சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்று ஒரு எண்ணம்.

வெண்ணிலா கபடி குழு.



முதல் முறை கேட்டபோது பாடல்கள் நன்றாக இருப்பது போல தோன்றுகின்றது. ஒரே ஒரு முறை தான் கேட்டிருக்கிறேன்.

கபடி கபடி பாடல் ஷங்கர் மஹாதேவன் குரலில் பட்டாசாக இருக்கின்றது. ஆனால் புதிதாக பெரிதாக சொல்லும் அளவு இப்பாடல் இல்லை, வழக்கமான பாடல் தான்.

லேசா பறக்குது பாடல் மீண்டுமொரு டெம்ப்ளேட் பாடல். பின்னணியில் ஒலிக்கும் இசை அழகான ராட்சசியே பாடலை நினைவூட்டுகின்றது. பெண்குரல் அட்டகாசம், குழைந்து நழுவி ஓடுகின்றது. இப்பாடலுக்கு நாயகி நம்ம சரண்யாவை நினைத்துப்பார்க்கும் போது பாடல் ஹிட் என்று கண்முன் தெரிகின்றது :) ஜெயம்கொண்டான் படத்தில் சரண்யாவை அந்த பாவனா பாடலில் ஒளிப்பதிவில் ஓரங்கட்டினாலும், அனைவரையும் கவர்ந்த‌தென்னவோ சரண்யா தான்.

" பட பட " பாடலும் கேட்க நன்றாக உள்ள ஒரு டெம்ப்ளேட் பாடல்.



Copyright 2006| Blogger Templates by GeckoandFly modified and converted to Blogger Beta by Blogcrowds.
No part of the content or the blog may be reproduced without prior written permission.