சிங்கப்பூர் comex 2008

மீண்டும் ஒரு IT fair சிங்கப்பூர் சன்டெக்கில் 28.08.2008 முதல் 31.08.2008 வரை நடைபெறுகின்றது. வழக்கம்போல் 1,2,3,4 மற்றும் 6 வது வளாகங்களில் கம்பெனிகள் கடைவிரித்துள்ளனர். பொதுவாக இவை வெறும் Crowd-pullers தான். பெரிய தள்ளுபடியோ சலுகைகளோ எதிர்பார்க்க முடியாது. பல கம்பெனிகள் ஒரே இடத்தில் குவிந்திருப்பதால், தேர்ந்தெடுக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

ஆப்பிள் தனது ஐபாட்‍களுக்கு 20% கழிவு தரப்போவதாக அறிவித்துள்ளது. (கடை எண்கள்: 8108,8236,6138)

ஜி.பி.எஸ் சமாச்சாரங்கள்(சிங்கப்பூருக்கு சுத்தமாக தேவை இல்லாத ஒன்று) இம்முறை பல சலுகைகளுடன் கிடைக்கும் என்று நினைக்கிறேன். HP-யில் 499$ க்கும் MIO-வில் 268$க்கும் கிடைக்கின்றது.

லேப்டாப்புகளை பொருத்தவரை லெனோவோ நிறைய தள்ளுபடியில் கிடைக்கின்றது. மற்ற கம்பெனிகளும் இன்னும் சில நாட்களில் நிறைய சலு்கைகளுடன் கிடைக்க வாய்ப்பு அதிகம் உள்ளன.

கேமிராக்களும் குவிந்து இருக்கின்றன. கிட்டத்தட்ட அனைத்து கம்பெனிகளும் கடை விரித்துள்ளன. விலை ஒன்றும் பெரிய மாற்றம் இல்லை.

பல கடைகள் பந்திக்கு முந்து கணக்கில் பல பொருட்களை தள்ளிவிடுகின்றனர். இவற்றை வாங்குவது அவ்வளவு எளிதல்ல.

பிரிண்டர் வாங்க இது நல்ல தருணம். நிறைய கம்பெனிகள் சலுகைகள் அளிக்கின்றன. Brother Printer வாங்கினால், கேர்ட்ரிட்ஜ் விலை குறைவு என்பதால், அதிக உபயோகங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். ஸ்கானர்கள் மற்றும் பிரின்டர்கள் சேர்ந்த ஆல்‍ இன் ஒன் வகை வாங்கச்செல்பவர்கள், ஸ்கானர் வெளியில் அமைந்தவாறு இருப்பவற்றை வாங்குவது நல்லது.

iSmart கம்பெனி எக்ஸ்டெர்னல் ஹார்ட்டிஸ்க் போன்ற பொருட்களை நிறைய தள்ளுபடியில் தருவதாக தெரிகின்றது. கடை எண் B6438

Ovation கம்பெனியும் நிறைய தள்ளுபடி விலையில் பொருட்களை வழங்குவதாக தெரிகின்றது. உதாரணம்: 320 ஜிபி 2.5" எக்ஸ்டெர்னல் ஹார்ட்டிஸ்க் விலை 125$. கடை எண் 6448

தகவல் உபயம்: The Strait Times/28.08.2008

சிம்லிம் தான் நம்ம பேட்டை என்பவர்களுக்கு இது ஒன்றும் பெரிய வித்தியாசத்தை பார்க்கமுடியாது :)

சிங்கப்பூரின் மக்கள்தொகையில் கால்வாசிப்பேர் வந்து செல்ல வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. எனவே கூட்டம் காட்டுத்தனமாக வர வாய்ப்பிருக்கின்றது.

சிங்கப்பூரின் முதன்மை பல்கலைக்கழகங்களில் ஒன்றான Nanyang Technical University(NTU) -கு திரு. அப்துல்கலாம் 26.08.2008 அன்று வருகை புரிந்தார். அங்கு வந்த அவரை மாணவ மாணவியர் சூழ்ந்து முற்றுகையிட்டனர். இதுபோன்ற சம்பவங்களை அடிக்கடி சந்திக்காத காவல்துறை கடைசியில் செல்லமாக கூட்டத்தைக்கலைத்தனர்.



பல்கலைகழக மாணவ மாணவிகள் மற்றுமன்றி ஏராளமான பொதுமக்களும்(நான் இந்த Category) இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சிங்கப்பூர் அதிபர் எஸ் ஆர் நாதன் தலைமை தாங்கினார்.

கலாம் உட்பட மேலும் 3 பேருக்கு டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டது. கலாம் மற்றும் Professor Yang Chen Ning, Nobel Laureate in Physics, 1957-க்கு Degree of Doctor of Engineering (honoris causa) பட்டமும். Professor Chua Nam Hai, Andrew W. Mellon Professor and Head, Laboratory of Plant Molecular Biology at the Rockefeller University, Professor Jose Luis Encarnacao, Fraunhofer Institute for Computer Graphics - க்கு Degree of Doctor of Science (honoris causa) பட்டமும் அளிக்கப்பட்டன. ஆனால் கலாமுக்கு மட்டும் சிறப்பு விழா எடுத்து சிறப்பித்தது அரசு :) .


கலாம் வழக்கம் போல் எளிமையில் கவர்ந்தார். குழந்தைத்தனமான அவரது சிரிப்பு, அட்டகாசம்.

கலாமை வரவேற்றுப்பேசியவர். கலாம் தான் தனக்கு ரோல்மாடல் என்று சொல்ல, அரங்கம் அதிர்ந்தது.

கலாம் பட்டத்தை ஏற்றுவிட்டு உடனே இருக்கைக்கு உட்காரச்சென்றார். ஆனால் உடனிருந்த இன்னொருவர், கலாமின் கையைப்பிடித்து மேடைக்கு நடுவில் புகைப்படக்காரர்களுக்காக நிறுத்தினார். கலாம் நாக்கை வெளியில் நீட்டி வெகுளித்தனமாக சிரித்ததை அரங்கில் வைக்கப்பட்டிருந்த ப்ரொஜெக்டர் வழியே பெரிதாக்கி காட்ட, அனைவரும் அவரது நகைப்பை ரசித்து கைதட்டினர்.

இந்தியப்பெண்கள் பலபேர் சேலையில் வந்திருந்தது நெகிழ்ச்சியாக இருந்தது. வரும்போது ஒரு தம்பதி கலாம் பார்த்துவிட்டு வந்ததை பெருமையோடு வீட்டிற்கு ஃபோன் செய்து பேசியது மற்றுமொரு நெகிழ்ச்சியான தருணம்.

ஓவர் டூ கலாம்.
கலாம் எடுத்த எடுப்பிலேயே தன்னைப்பற்றி சில கதைகள் சொல்லப்போவதாக கூறி ஆரம்பித்தார்.
அவர் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்தபோது Lowlevel attack aircraft project
செய்தபோது இவரது டீம் செய்த முதல் படி, புரபோசர் ஸ்ரீனிவாசனின் கவனத்தை ஈர்க்காத‌தால், ஸ்ரீனிவாசன் கலாமுக்கு 3 நாட்கள் அவகாசம் கொடுத்து முடித்துத்தரச்சொன்னாராம். இதை சொல்லிக்கொண்டு இருந்த நேரத்தில் அருமையான நகைச்சுவை ஒன்றை எடுத்து விட்டார்.

Quotes of what Kalam said,
"Sreenivasan told me, 'Look youngman', remeber it was in 1954 , 'you have to finish this project before monday otherwise your scholoship will be cut' "

பின்னர் கலாம் காட்டுத்தனமாக உழைத்து அதை வெற்றிப்பாதையில் அழைத்துச்சென்றபோது ஸ்ரீனிவாசன் அதை பாராட்டியதையும் நினைவுகூர்ந்தார்.

வெற்றியை பற்றி சொல்லும்போது அடக்கி வாசித்தது குறிப்பிடத்தக்கது.

கலாம், 21ம் நூற்றாண்டில் பல்கலைக்கழகங்கள் உயர் தொழ்ற்நுட்ப உலகில் நல்ல குடிமகன்களை உருவாக்குவதில் எப்படி பங்களிக்கவேண்டும் என்பது பற்றி கூறினார்.

நாட்டின் தலைவர்களிடம் கல்வியின் பங்கு பற்றியும், கல்வியில்லாத நாட்டுத்தலைவரால் பிரச்சினைகளை திறம்பட கையாளும் திறம் குறைவு என்றும் கூறினார்.

கண்டுபிடிப்புகளுக்கு திறமையாகவும், எப்போதும் சிந்திக்கும் மனமும் உந்துகோளும் தேவை என்றார்.

சிங்கப்பூரின் கல்வி தரத்தை பாராட்டிப்பேசினார்.

கட்டண உயர்வுகளையும் அதை சமாளிக்க வேண்டிய உதவிகளையும் பற்றிக்குறிப்பிட்டார்.

NTU தற்சமயம் கலந்துகொண்டிருக்கும் முக்கிய ப்ராஜெக்டுகள் பற்றியும் சுருக்கமாக எடுத்துரைத்தார்.

ஆக சிங்கப்பூரிலும் கலக்கினார் தலைவர்.

நான் படித்த புனித வளனார் மேல்நிலை பள்ளி(மெயின்) விளையாட்டிற்கு பெயர் போன பள்ளி. நான் 1ம் வகுப்பு சேர்ந்த போதே(1989) பெரிய மைதானம் இருந்தது. சில வருடங்களில் அங்கு கேலரி கட்டப்பட்டது. விளையாட்டையும் எங்கள் பள்ளியையும் பிரித்துப்பார்ப்பதென்பது இயலாத காரியம்.

அந்த மைதானம் எத்தனை வியர்வைத்துளிகளையும் இரத்ததுளிகளையும் சந்தித்திருக்கும் என்பது அங்கு படித்து வளர்ந்தவர்களுக்குத்தான் புரியும். விளையாட்டை படிப்பாகவும், படிப்பை விளையாட்டாய் கொண்டவர்களும் காணப்படும் பகுதி அது.

நாளடைவில்(வருடடைவில்) மைதானத்தில் அத்லெட் ட்ராக் போடப்பட்டு அங்கு கருப்பு நிற மண்ணால் நிரப்பப்பட்டது. அன்று ஆரம்பித்த‌து எங்கள் மைதான மோகம். அந்த மண் பற்றி பல கதைகள் புழங்க ஆரம்பித்தன.

கதைகள் எங்கள் பள்ளிக்கு புதிது அல்ல. ஹாஸ்டல் மற்றும் போர்டிங் பயல்கள் கிளப்பிவிடும் கதைகள் ஒவ்வொருவரிடம் மாறி சென்று ஒரு வித்தியாசமான பரிமாணத்தை தொடும். கழிவறைக்குழியில் இருந்து கை வந்த கதை மிகப்பிரசித்தம்.

அந்த மண் பற்றிய கதைகளுக்கு அளவே இல்லை. அந்த மண் ஃபாரீன் மண் முதல் வடநாட்டு கரிசல் மண் வரை பல ஊகங்கள் இருந்தன. அந்த மண்ணை ஒரு கைப்பிடியாவது வீட்டுக்கு கொண்டு செல்லாத பயல்கள் இருக்க முடியாது. அதிலும் அந்த மண்ணில் காலைத்தேய்த்தால் ஷூ பாலிஷாகவும் இருப்பதும் சீக்கிரத்திலேயே கண்டறியப்பட்டது.

கால் முழுக்க கருப்பாக அனைவரும் விளையாட்டு வீரராக விரும்பினோம். அப்போது வெள்ளை சட்டையும் கருப்பாக, பள்ளியில் விளையாடுவது வீட்டுக்கும் தெரிந்து உதையும் வாங்கிக்கொண்டு இருந்தோம்.

அந்த மைதானத்தில் இன்னும் சில ஆண்டுகளில், ஒரு ஒலிம்பிக் சிலை கட்டப்பட்டது(பார்சிலோனா ஒலிம்பிக்கை ஒட்டி என்று நினைவு). அதற்கும் ஊகங்கள் குறைவில்லாமல் ஆரம்பித்தன.

அடுத்த ஒலிம்பிக் நம்ம மைதானத்தில் தான் நடைபெறப்போகிறது என்று ஆரம்பித்துவைத்தனர் பள்ளி செல்வங்கள்(ஒரு பாதிரியார் இப்படி தான் கூப்பிடுவார், ஆனால் விடைத்தாள் கொடுக்கும் போது அடி பின்னி எடுப்பார்).

இப்படி ஒரு ஊகம் ஆரம்பிக்க காரணங்களும் சற்று வலுவாகத்தான் இருந்தன. ஒவ்வொரு விளையாட்டுக்கும் கிட்டத்தட்ட கீழ்க்கண்ட அளவு விளையாட்டரங்கள் இருந்தன.
Hockey: 2
Football: 3
Basket ball: 5
Volleyball, tennis courts: 5
மேலும் நமக்கு பழக்கப்பட்ட மிகப்பெரிய மைதானம்.

பதிவு சற்று பெரிதாகிவிட்டதால், அடுத்த பதிவில் தொடர்கிறேன்....

டிஸ்கி:
அதிக எதிர்பார்ப்பின்றி என்னைப்போல் தியேட்டர் மாறி நுழைந்து பாருங்கள்.

கோலாலம்பூர் ட்வின் டவர்ஸில் டார்க் நைட் படம் பார்க்க சென்ற நான், கடைசி நேரத்தில் குட்டியான‌ தலைவரின் கட் அவுட் பார்த்தபின் தான் தெரிய வந்தது குசேலன் படம் அங்கு ஓடிக்கொண்டிருப்பது. சரி தலைவர் படத்தை முதல் நாளே பார்த்து பீற்றிக்கொள்ளலாம் என்று நுழைந்தும் விட்டேன்.

டிக்கெட்டின் போது,எந்த சீட் வேண்டும் என்று டிக்கெட் விற்ற பெண் நக்கலாக கேட்டார். பார்த்தால் முழுக்க எல்லா சீட்களும் நீல நிறத்தில் இருந்தன. போச்சுடா டிக்கெட் இல்லை போல என்று நினைத்து கவலைப்படலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது கடைசி வரிசையில் ஆச்சர்யமாக ஒரு 5 சீட் காலியாக இருக்க(ஆரஞ்சு நிறம்) பிடித்தேன் ஒரு சீட்டை.

உள்ளே நுழைந்ததும் தான் தெரிந்தது, மொத்தமே தியேட்டரில் 5 பேர் தான். சூப்பரு என்று நினைத்த படி இருக்கும் போது இன்னொரு 3 ஜோடிகள் தியேட்டரின் மூலை சீட்டுகளுக்கு அடம் பிடித்து செல்ல, சரி இவர்கள் படம் பார்க்கப்போவதில்லை என்று தீர்மானித்துவிட்டபடியால் இன்னமும் மொத்த கவுண்ட் 5 தான்.

சரி என்று உட்கார்ந்தால் பசுபதியும் ஆன்ட்டியும் மன்னிக்கவும் மீனாவும் அவர்களின் இரு குழந்தைகளும் ஆடிப்பாடி கொஞ்சம் வருத்தப்பட்டுக்கொண்டு அப்படியே போய்க்கொண்டிருந்தது.

இந்த இடத்தில் குறிப்பிட வேண்டிய ஒரு விஷயம், கிராஃபிக்ஸ். தசாவதாரத்தின் ஆரம்ப காட்சிகளை விட நேர்த்தியான முறையில் செய்யப்பட்டிருந்தது. சிறுபிள்ளைத்தனமாக ஒரு அருவியை செட் செய்து இருந்தாலும், நேர்த்தி இருந்தது. கிட்டத்தட்ட எல்லா காட்சிகளும் டிஜிட்டல் கலர் கரெக்ஷன் அல்லது ஃபில்டர் முறையில் ரீடச் செய்யப்பட்டிருக்கின்றன. வேறு வழி, காசை செலவு செய்யவேண்டுமே.

சினிமா சினிமா பாட்டு ஏனோ ஏடிஎம் படத்தின் துவக்கப்பாட்டு எல்லாப்புகழும் பாட்டை நினைவுபடுத்தியது.

பசுபதி தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றார், இருந்தாலும் விருமாண்டி, மும்பை எக்ஸ்ப்ரஸ் போல பலவித நடிப்பை காட்ட வழியில்லை.

சந்தானமும், வடிவேலுவும் படத்தில் உள்ளேன் ஐயா.

ஜி.வி.பிரகாஷின் முதிர்ச்சியின்மை பாடல்களில் தென்பட்டாலும் பாடல்கள் ஒன்றும் அவ்வளவு மோசமில்லை. ஆனால் படமாக்கப்பட்ட விதம் மிகவும் மட்டரக‌ம். நான் இடையில் சில பாடல்களுக்கு தூங்கித்தொலைந்தேன்.

இங்குள்ள தியேட்டர்களில் இடைவேளை விடப்படுவதில்லை, எனவே எல்லா பாடல்களுக்கும் கூட இருந்த 5 பேரும் வெளியேறி என்னை பயத்தில் தள்ளினர்.

ரஜினி பேய் படங்களில் தாராளமாக நடிக்கலாம். அதுவும் தலை மட்டும் வெட்டப்பட்ட காட்சியில் அய்யோ என்ன ஒரு கொடூரமாக இருக்கிறார்.

படத்தில் சிறந்த நடிப்பு நயன்தாராவிடம் இருந்து வெளிப்பட்டது. இங்கே வெளிப்பட்டது என்பது single meaning-ல் பாவிக்கப்படுகிறது. ஒரு நடிகையாக வாழ்ந்திருக்கிறார்.

சினேகாவும் குஷ்புவும் ஒரு பாடலில் ஒரு காட்சிக்கு வருகிறார்கள். இருவரும் பார்க்க ஒரே மாதிரி தான் இருக்கிறார்கள். இதை குஷ்புவுக்கான பாராட்டாகவோ அல்லது சினேகாவுக்கான அர்ச்சனையாகவோ எடுத்துக்கொள்வது உங்கள் கையில்/கண்ணில்.

மற்றபடி நிறைய பேர் மொக்கையாக படத்தில் வந்துபோகின்றனர். அவர்கள் பெயர்களை எழுத ஆரம்பித்து உண்மையாருக்கு போட்டியாக விரும்பவில்லை.

நான் ரஜினியை இந்த படத்தில் எதிர்பார்க்கவே இல்லை, எனவே எதிர்பார்ப்பும் இல்லை. ஏதோ ஷூட்டிங் பார்க்க வந்து படத்தில் குதித்தது போல் காணப்படுகின்றார்.(இந்த வரி உபயம்: ஆனந்தவிகடன் மௌனம் பேசியதே விமர்சனம்)

ரஜினியின் க்ளோஸப் காட்சிகளில், ஒட்டப்பட்ட அவரது உதடுகள் தசாவதாரத்தை நினைவூட்டுகின்றன.

மொத்ததில் நல்ல ஒரு சென்டிமென்ட் படம். சத்தியமாக ரஜினி படம் அல்ல. பி.வாசு படம்.
எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி ஒரு முறை பார்க்கலாம்.

எல்லா தரப்பையும் திருப்திபடுத்த முயற்சி செய்துள்ள பி.வாசுவின் முயற்சி தோல்வி அடைந்தாலும், குப்பை என்றெல்லாம் அவசரப்பட்டு சொல்லிவிட முடியாது.



Copyright 2006| Blogger Templates by GeckoandFly modified and converted to Blogger Beta by Blogcrowds.
No part of the content or the blog may be reproduced without prior written permission.