இதை எழுத உட்காரும் முன், இருக்கையின் அடியில் ஏதும் குண்டு சமாச்சாரங்கள் இருக்கின்றனவா என்று பார்த்து உட்காரவேண்டி இருக்கிறது.

இந்த தீவிரவாதக்கிறுக்கு பசங்க, என்னதுக்குன்னே தெரியாம அங்க இங்க குண்டு வைத்துவிட்டு சென்றுவிடுகின்றனர்.

இந்த நாய்கள் குண்டு வைத்தால் மட்டும் என்ன பெரியதாக செய்துவிட முடியும்?

மக்களை கொல்வதால் என்ன பயன் கிடைக்கப்போகிறது?

போகிற வழிக்கு பல மூட்டை பாவங்கள்(?) தான் கிடைக்கப்போகின்றது.

முட்டாள்தனமான ஒரு சித்தாந்தத்தில் வாழும் மூடர்கள்.

டேய் தீவிரவாத திருட்டுப்பசங்களா, உங்களால ஒரு **** **** முடியாது

==============================
==============================

தமிழ்நாடு சந்தோஷமாக இருக்கின்றது.

ஆள்பவர் குடும்பத்துடன் சந்தோஷமாக இருப்பதால், மக்களுக்கும் அது தொற்றியிருக்கும் என்று நம்புகிறேன்.

மற்றபடி விலைவாசி, பொருளாதார விஷயங்களை யாராவது கவனித்துக்கொள்ளட்டும் என்று, பேருந்தில் ஜன்னல் வழியே கர்ச்சீஃப் போட்டு இடம் பிடிப்பதில் பிசியாக உள்ளனர் பொதுஜனத்தினர். இடம் கிடைத்தவரும் சந்தோஷப்படுகின்றார். இடம் கிடைக்காமல் தொங்கும் வாலிபனும் சந்தோஷமாக உள்ளான்.

முக்கிய எதிர்க்கட்சி தலைவர் திடீரென்று அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதால், அவரும் சந்தோஷமாக உள்ளார்.

இவர் இப்படி சந்தோஷமாக உள்ளதால், அடுத்த இடத்தை பிடிக்க போராடும் மற்ற கட்சித்தலைவர்களும் தொண்டர்களும் சந்தோஷமாக உள்ளனர்.

நம்ம எம்.பிக்களும் சந்தோஷமாக உள்ளனர் மற்ற மாநிலங்கள் போல அதிக காசு பார்க்கமுடியாமல் நேர்மையாய் ஓட்டு போட்டதற்கு

குசேலன் வருவதால் ரஜினி ரசிகர்களை விட தியேட்டர் முதலாளிகளும் சந்தோஷமாய் உள்ளனர்.

எல்லோரும் சந்தோஷமா இருங்கப்பா.

0 Comments:

Post a Comment





Copyright 2006| Blogger Templates by GeckoandFly modified and converted to Blogger Beta by Blogcrowds.
No part of the content or the blog may be reproduced without prior written permission.