கவிதைபவன்(1) - பேருந்து

இடம் (1)

இந்த இடமில்லா பேருந்தில் ஏறுகிறாரே இந்த பெரியவர்
எங்கே உட்காருவாரோ!
சரி நான் கொஞ்சம் தூங்கிக்கொள்கிறேன்.
நான் இறங்க நேரம் இருக்கிறது

இடம் (2)

எனக்கும் தான் வயதாகிக்கொண்டிருக்கிறது.
கால் வலி மூட்டு வலி வருகிறது.
10வது படிக்கும் பையன் இருக்கிறான்
நான் ஏன் இந்த பெரியவருக்கு இடம் தர வேண்டும்?

நோக்கம்


பக்கவாட்டு சீட்டில்
துறுதுறு குழந்தை
அழகாய் சிரிக்கின்றது
கவனத்தை பலமாய் ஈர்க்கின்றது
சேலை விலகிய அதன் அம்மாவை விட‌


====================================================

ஹைக்கூ

தாகம்

பேருந்துக்கு வெளியில்

நல்ல வெயில்

பசுவின் நாக்கில் வழிகிறது உமிழ்நீர்


முடி

கூட்டமில்லா பேருந்தில்

எல்லார் காலிலும் மிதிபடுகின்றது

ஒரு நீள முடி

4 Comments:

  1. Gnaniyar @ நிலவு நண்பன் said...
    //
    இந்த இடமில்லா பேருந்தில் ஏறுகிறாரே இந்த பெரியவர்
    எங்கே உட்காருவாரோ!
    சரி நான் கொஞ்சம் தூங்கிக்கொள்கிறேன்.
    நான் இறங்க நேரம் இருக்கிறது//


    மிகவும் ரசித்தேன் நண்பரே
    கிஷோர் said...
    நன்றி நிலவுநண்பா
    கோவை விஜய் said...
    பேரூந்துக் கவிதை பயணியாலர்களின் மனநிலையை படம் பிடித்து காட்டுகிறது

    தி.விஜய்

    pugaippezhai.blogspot.com
    வாங்கோணா வாங்கோ கோவையின் ரேஸ் திருவிழாவை பார்க்க வாங்கோணா..! 21 மறுமொழிகள் | விஜய்
    கிஷோர் said...
    நன்றி விஜய்

Post a Comment





Copyright 2006| Blogger Templates by GeckoandFly modified and converted to Blogger Beta by Blogcrowds.
No part of the content or the blog may be reproduced without prior written permission.