2000 மடங்கு அதிக கேன்சர் பாதிப்பு கொண்ட கடலூர் தியாக உள்ளங்களே!

கடலூரில் சொந்த வீடு இருக்கின்றதா இல்லை கட்டப்போகிறீர்களா? வேண்டாம் கைவிடுங்கள் இந்த யோசனையை. உங்கள் தலைமுறையை காப்பாற்றிக்கொள்ளுங்கள்.

ஏன் இந்த நிலைமை?

விமோசனம் உண்டா?

இவைகளுக்கு விடை தேடும் நம் தன்னார்வ நண்பர் குழு, சென்னையில் ஒரு விழிப்புணர்வு முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளது.

ஏன் இந்த கூச்சல்? என்று புரியாதவர்கள் கேட்கலாம்.

சாதாரண மக்களை விட 2000 மடங்கு அதிக கேன்சர் பாதிக்கும் வரம் பெற்றிருக்கிறோம்.

எனவே அதை அழித்தொழிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

பிரபல(இந்த வார்த்தையை போட்டால் தான் கூட்டம் கூடுகிறது) மற்றும் முக்கிய அறிவியலாளர்கள் மற்றும் சூழ்நிலை பாதுகாவலர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வூட்டுகின்றனர்.

இதுவரை இதன் தீவிரம் புரியாதவர்கள், தயவு செய்து இக்கூட்டத்தில் கலந்து கொண்டு நிலைமையை உணர்ந்து கொள்ளுங்கள்.

மேலதிக தகவல்களுக்கு:
நித்தியானந்த்- 9444082401
மது- 9894915969

தேதி: 24‍ மே 2008 (சனிக்கிழமை)
நேரம்: மாலை 6:00

இடம்:
CEM office,42A,1st Floor,
5th Avenue, (Near Besant Nagar beach)


தொடர்புள்ள சுட்டிகள்:
http://cuddaloreonline.blogspot.com/2008/05/gathering-of-cuddalore-natives-in.html
http://cuddaloreonline.blogspot.com/2008/03/2000-times-higher-cancer-risk-for.html
http://pathividukiren.blogspot.com/2008/04/blog-post_06.html

இறுதியாக ஒரே ஒரு வார்த்தை, உங்கள் குடும்பம் கடலூரில் இருக்கின்றதா? உங்கள் குடும்பத்தையும் ஊரையும் காப்பாற்றுங்கள். கலந்துகொண்டு உங்கள் ஆதரவை தாருங்கள்.

2 Comments:

  1. வடுவூர் குமார் said...
    ஓரளவாவது விழிப்புணர்வு கொண்டுவரட்டும் இந்த பதிவு.
    கிஷோர் said...
    நிலைமை நாளுக்கு நாள் கவலைக்கிடமாகிக்கொண்டிருக்கின்றது.

    If not now, then never. :-(

Post a Comment





Copyright 2006| Blogger Templates by GeckoandFly modified and converted to Blogger Beta by Blogcrowds.
No part of the content or the blog may be reproduced without prior written permission.