சமீபத்தில் நிகழ்ந்த நிலந‌டுக்கத்தால் குழந்தை இழந்தவர்கள் மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள அரசு சான்றளிக்கிறது என்ற செய்தி புதுமையாக இருந்தது. அது பற்றி நான் மேலும் சில தகவல்களை விக்கிபீடியா மூலம் அறிந்துகொண்டேன். அந்த விபரங்கள் பின்தொடர்கின்றன.

* சீனாவின் நகரம் மற்றும் பெரும்பாலான கிராமப்புறங்களில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ள தடை உள்ளது.

* தடையை மீறுபவர்களுக்கு அபராதம் மற்றும் பணிஊக்கத்தொகை மறுப்பு போன்ற தண்டனைகள் வழக்கத்தில் இருக்கின்றன.

* இதில் சில விதிவிலக்குகள் ஒரே பிரசவத்தில் டபுள், ட்ரிபுள் அடிக்கும் பெற்றோருக்கு இவ்விதி தளர்த்தப்படுகின்றது(வேறு வழியில்லாமல்)

* சில பகுதிகளில் முதல் குழந்தை பெண்ணாகவோ அல்லது உடல் ஊனமுற்றோ பிறந்தால் அடுத்த குழந்தைக்கு இச்சட்டத்தில் இருந்து விதிவிலக்கு. அப்போதும் குழந்தைகளுக்கு இடையில் 3 அல்லது 4 வருட இடைவெளி இருக்க வேண்டும்.

* அப்படியும் குளிர், கால சந்தர்ப்பங்களால் பிறக்கும் இரண்டாவது குழந்தை மற்றும் அடுத்த குழந்தைகள் சட்டவிரோதக்குழந்தைகளாக (Illegally born child)அறிவிக்கப்படுகின்றன. (அப்பன் பாவம் பிள்ளையை தாக்கும் என்பது இது தானா?)

* வெளிநாடுகளில் பிறக்கும் சீனக்குழந்தைகள் குடியுரிமை பெறும் வரை அவர்களுக்கும் இச்சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது.

* வெளிநாடுகளில் இருந்து சீனாவிற்கு மீண்டும் வரும் சீன‌க்குடிமகன்களுக்கு(இது காண்டு கஜேந்திரன் மேட்டர் இல்லை) இதிலிருந்து விலக்கு,,

* விதிக்கப்படும் அபராதம் குடும்பக்கட்டுப்பாடு அபராதம் என்று அழைக்கப்படுகிறது (தமிழ் மீடிய பள்ளி தேர்வுகளுக்கு அப்புறம் இப்போது தான் இப்படி ஒரு வாக்கியம் எழுதுகிறேன்)

* இந்த அபராதம் குழந்தை பிறந்த வருடத்தின் தந்தை சம்பளத்தில் இருந்து கணக்கிடப்படுகிறது. இது இறுதி வரை மாறாது. இப்படி நீள்கிறது இப்பட்டியல், அது சரி இப்படி அதிகப்படியாக(இவ்வார்த்தைக்கு தஞ்சை பக்கம் வேறு ஒரு அர்த்தமும் உண்டு) பிறக்கும் குழந்தைகள் மற்றவர்களிடம் திட்டு வாங்கும்போது அடேய் அபராதத்துக்கு பிறந்த பயலே என்று திட்டு வாங்கக்கூடிய சூழல் நிறைய ;-)

மாறலாமா இல்லை வேண்டாமா என்று குழப்பத்தில் இருந்த நான், ஒரு வழியாக மாறிவிட்டேன்


குழலி, ரொம்ப நன்றிங்கோ : http://www.kuzhali.co.nr/

அடி மேல் அடி வாங்கி களைத்துப்போய் உட்கார்ந்திருக்க அவரை சந்திக்கிறார் நம் நிருபர்.

அடைப்புக்குறிக்குள் உள்ளதெல்லாம் Mind Voice

நிருபர்: சார்!

தரணி: அய்யயோ நான் இல்லை நான் இல்லை

நிருபர்: சார் நான் பதிவிடுகிறேன் பத்திரிக்கை நிருபர் வந்திருக்கேன்

தரணி: (இன்னுமா இந்த உலகம் உன்னை மதிக்குது. பின்றடா.) வாங்க வாங்க என்னையும் மதிச்சு வந்து பார்க்கறீங்களே! நீங்க ரொம்ப நல்லவருங்க.

நிருபர்: அட நீங்க வேற‌, உங்க குருவி அருமையை பத்தி தமிழ்மணத்துல வந்து கேட்டுப்பாருங்க. குருவி விமர்சனம் போட்ட எல்லோருக்கும் செம ஹிட்ஸாம். கூகுள் ஆட்ஸ்ல இருந்து தலைவலி மாத்திரை விளம்பரமா குவியுதாம்.

தரணி:(அடப்பாவிகளா நம்ம படத்தை வச்சி இவ்வளவு பேரு கொண்டாட்டமா இருக்காங்களா?) தெரியும் சார். இந்த மாதிரி IT மக்கள் நல்லா ரசிக்கணும்னுதான் மலேசியாவில எல்லாம் போய் படம் எடுத்திருக்கோம்.

நிருபர்: (புரியுதா இல்ல புரியாத மாதிரி நடிக்கிறாரா?) அது சரி சார் இந்த படத்துக்கு கண்டிப்பா மலேசியா போய்த்தான் ஆகிருக்கணுமா?

தரணி: அதை ஏன் சார் கேக்குறீங்க. படம் அழகா லோக்கல்லதான் போய்க்கிட்டு இருந்துச்சு, அந்த நேரம் பார்த்தா இந்த பில்லா படம் வந்து தொலையணும்? அத பார்த்ததும் நம்ம டாக்டர் சார், நம்ம ரசிகர்களும் மலேசியா பார்க்கணும் கதைய மாத்துங்கனு சொல்லிட்டாரு. அப்புறம் என்ன? இது தான் மலேசிய குருவி கதை.

நிருபர்: எல்லோருக்கும் படம்னா ஒரு இன்ஸ்பிரேஷன் இருக்கும். பார்த்தீங்கன்னா, முருகதாஸ் கஜினி படம் வர்ரதுக்கு முன்னாடி இத மாதிரி படம் உலகத்துலயே வந்ததில்ல அப்படின்னார். ஆனா மக்களுக்கு மெமெண்டோ பத்தி தெரிஞ்சதும் சைலண்ட் ஆகிட்டாரு. இவ்வளவு ஏன் நீங்களே கில்லி படம் வர்ரதுக்கு முந்தி தெலுங்கு படத்துக்கும் சம்பந்தமே இல்லைனு சொன்னீங்க. ஆனா படம் வந்ததுக்கப்புறம் தான் ட்ரஸ் முதல்கொண்டு காபினு தெரிஞ்சுது. இந்த படத்துல‌ எப்படி?

தரணி: ஆக்சுவலா இந்த படம் நம்ம சொந்த சரக்கு தான். ஆனா ஹோட்டல்ல டிஸ்கஷன்ல‌ நம்ம டாக்டர் சார் தான் சாப்பிட்டுகிட்டே மசாலா கம்மியா இருக்குனு சொல்லி திருப்பாச்சி, சிவகாசி மாதிரி சில ஹிட் படங்கள் சிடி கொடுத்து இன்ஸ்பிரேஷன வளர்த்துக்க சொன்னாரு.

நிருபர்: தயாரிப்பாளர் தரப்பில இருந்து பாராட்டு ஏதும் வந்துதா?

தரணி: இதுவரைக்கும் இல்லை. படத்தோட திருட்டு வி.சி.டி ஒழிக்க போலீஸ் போனப்போ, ஒரு குருவி டிஸ்க் கூட இல்லையாம். அந்த அளவுக்கு படம் மக்களை பாதிச்சிருக்குதாம். இதுக்காகவே நம்மள ஸ்பெஷலா பாராட்டணும்னு பொதுக்குழு கூட்டிருக்காங்களாம்.

நிருபர்: (சுத்தம். இவர்கிட்ட பேசிகிட்டு இருக்கும்போதே தலை வலிக்குதே) சரி சார் இந்த படம் சொல்ற மெசேஜ் என்ன?

தரணி: உலகத்துல அனுபவிக்க இன்னும் நிறைய கஷ்டம் இருக்கு. (இது எனக்கும் தான்)

நிருபர்: அய்யோ இன்னும் வருதா? எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்


இன்று சென்னையில் மாலை 6 மணிக்கு, கடலூர்வாசிகளை கேன்சர் பாதிக்கும் வாய்ப்பு மற்றும் கடலூரின் சுற்றுப்புறச்சூழல் பற்றிய கருத்தரங்கு நடைபெருகின்றது. கலந்துகொண்டு விழிப்புணர்வு பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இதைப்பற்றிய முந்தைய பதிவு: http://pathividukiren.blogspot.com/2008/05/blog-post_23.html

மேலதிக தகவல்களுக்கு:
நித்தியானந்த்- 9444082401
மது- 9894915969

தேதி: 24‍ மே 2008 (சனிக்கிழமை)
நேரம்: மாலை 6:00

இடம்:
CEM office,42A,1st Floor,
5th Avenue, (Near Besant Nagar beach)



தொடர்புள்ள சுட்டிகள்:
http://cuddaloreonline.blogspot.com/2008/05/gathering-of-cuddalore-natives-in.html
http://cuddaloreonline.blogspot.com/2008/03/2000-times-higher-cancer-risk-for.html
http://pathividukiren.blogspot.com/2008/04/blog-post_06.html

படம் உதவி:
http://cuddaloreonline.blogspot.com/

ஆங்கில மூலம்:
http://cuddaloreonline.blogspot.com/2008/05/gathering-of-cuddalore-natives-in.html

2000 மடங்கு அதிக கேன்சர் பாதிப்பு கொண்ட கடலூர் தியாக உள்ளங்களே!

கடலூரில் சொந்த வீடு இருக்கின்றதா இல்லை கட்டப்போகிறீர்களா? வேண்டாம் கைவிடுங்கள் இந்த யோசனையை. உங்கள் தலைமுறையை காப்பாற்றிக்கொள்ளுங்கள்.

ஏன் இந்த நிலைமை?

விமோசனம் உண்டா?

இவைகளுக்கு விடை தேடும் நம் தன்னார்வ நண்பர் குழு, சென்னையில் ஒரு விழிப்புணர்வு முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளது.

ஏன் இந்த கூச்சல்? என்று புரியாதவர்கள் கேட்கலாம்.

சாதாரண மக்களை விட 2000 மடங்கு அதிக கேன்சர் பாதிக்கும் வரம் பெற்றிருக்கிறோம்.

எனவே அதை அழித்தொழிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

பிரபல(இந்த வார்த்தையை போட்டால் தான் கூட்டம் கூடுகிறது) மற்றும் முக்கிய அறிவியலாளர்கள் மற்றும் சூழ்நிலை பாதுகாவலர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வூட்டுகின்றனர்.

இதுவரை இதன் தீவிரம் புரியாதவர்கள், தயவு செய்து இக்கூட்டத்தில் கலந்து கொண்டு நிலைமையை உணர்ந்து கொள்ளுங்கள்.

மேலதிக தகவல்களுக்கு:
நித்தியானந்த்- 9444082401
மது- 9894915969

தேதி: 24‍ மே 2008 (சனிக்கிழமை)
நேரம்: மாலை 6:00

இடம்:
CEM office,42A,1st Floor,
5th Avenue, (Near Besant Nagar beach)


தொடர்புள்ள சுட்டிகள்:
http://cuddaloreonline.blogspot.com/2008/05/gathering-of-cuddalore-natives-in.html
http://cuddaloreonline.blogspot.com/2008/03/2000-times-higher-cancer-risk-for.html
http://pathividukiren.blogspot.com/2008/04/blog-post_06.html

இறுதியாக ஒரே ஒரு வார்த்தை, உங்கள் குடும்பம் கடலூரில் இருக்கின்றதா? உங்கள் குடும்பத்தையும் ஊரையும் காப்பாற்றுங்கள். கலந்துகொண்டு உங்கள் ஆதரவை தாருங்கள்.

திருட்டு டாரண்ட்டில் படம் பார்த்துவிட்டு ஒரு புண்ணியவான் அனுப்பி இருக்கும் ஒரு மெயில். கண்டு களியுங்கள்

நல்ல ப்ரிண்ட்டில் இருப்பது அசல் தெலுங்கு பதிப்பு, திருட்டு வீடியோ ப்ரிண்ட்டில் இருப்பது நகல் தமிழ் பதிப்பு


















நான் திருவனந்தபுரத்தில் டெக்னோபார்க்கில் வேலை செய்யும் போது நாங்கள் நண்பர்கள் ஒன்றாக கழக்கூட்டம் என்ற இடத்தில் தங்கி இருந்தோம்.

திருவனந்தபுரம் பொதுவாக இரவு 9 மணிக்கே கடை அடைத்து இரவு 12 மணி போல் தோற்றம் அளிக்கும். கழக்கூட்டம் டெக்னோபார்க்குக்கு அருகில் இருந்ததால் நள்ளிரவு வரை சில கடைகள் திறந்திருப்பதுண்டு.

சரி சொல்லவந்த விஷயம் என் வீடு இருந்த இடம் தான். டெக்னோபார்க் என்பது நம்மூர் டைடல் பார்க் மாதிரி. ஆனால், டெக்னோபார்க் வாசலை தாண்டி சற்று வெளியில் வந்தாலும் கும்மிருட்டாகத்தான் இருக்கும். ஒரே ஒரு சேச்சி கடை மட்டும் திறந்திருக்கும்.

என் வீட்டில்(வீடு என்று சொல்லவே ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது. பேச்சுலர்கள் தங்கினால் அது என்றுமே ரூம் தான் அது என்ன தான் பங்களாவாக இருந்தாலும் சரி) நான் ஒருவன் மட்டும் ஏடாகூட நேர ஷிப்ட்களில்(சத்தியமாக ஷிப்ட் தான். நடுவில் ப் இருக்கிறது) மாட்டிக்கொள்வேன்.

வீடு சில நிமிட (மலையாலத்தில் மினிட் :) ) நடைதூரத்தில் இருந்தாலும், வீடு செல்லும் வரை கும்மிருட்டு தான். இத்தனைக்கும் அது ஒரு நெடுஞ்சாலையில் அமைந்திருந்தது. அதை நினைத்தாலே குலை நடுங்கும் அளவுக்கு அப்படி ஒரு பகுதி. போதாக்குறைக்கு நாய்கள் வேறு. என் நண்பன் ஒருவனை ஒரு நாய் பழிவாங்கிவிட, நாய்களைக்கண்டாலே PM, one-to-one meeting-க்கு கூப்பிடும் போது பயப்படுவது போல செல்லவேண்டியதாயிற்று.

எங்கள் பகுதியின் பெயர் கழக்கூட்டம் என்பது கள்ளர்கள் அதிகம் இருந்ததால் வைக்கப்பட்ட பெயர் என்று போகிற போக்கில் ஒரு புண்ணியவான் கொளுத்திப்போட்டு விட்டு சென்றுவிட. எப்போதும் உயிர் பயத்துடனே செல்வேன்.

அந்நேரங்களில் என் ரூம்மேட் நண்பர்கள் அந்நேரம் பார்த்து SAW I, II,III Hostel, Wrong turn, Texas chainsaw massacre பட டிவிடிகளாக வாங்கி குவித்து என் பயத்திற்கு உரம் போட்டுக்கொண்டிருந்தனர். படம் பார்க்கும்போதென்னவோ கமெண்ட் அடித்து பெரிய இவன் போல் காட்டிக்கொண்டாலும் இரவு நேரங்களில் வரும்போது தான் அந்த பயம் தெரியும்.

இந்த ஃபார்வர்ட் மெயில் தெய்வங்கள் அந்த நேரத்தில் தான் அனுப்பி தொலைவார்கள், TCS அலுவலரை பெங்களூரில் விரல் வெட்டிவிடுவதாக மிரட்டி ஏ.டி.எம்(அழகிய தமிழ் மகன் அல்ல‌) கார்டை பிடிங்கிக்கொண்டார்கள், தலையில் கஜினி அசின் போல கம்பியால் தலையில் அடித்து பைக்கை பிடிங்கிகொண்டார்கள் என்றெல்லாம் கபோதித்தனமாக வந்து சேரும்.

அது என்னவோ தெரியவில்லை என்ன தான் பகுத்தறிவு பேசினாலும் இந்த இருட்டு பயம் மட்டும் போவதில்லை. என் காதலியுடன் ஒருநாள் இரவில் மொட்டை மாடியில் ஃபோனில் பேசிக்கொண்டிருந்தபோது(இது கடலை அல்ல) பகுத்தறிவு பாடம் நடத்திக்கொண்டிருந்தேன்.

"இதோ பார் பேய், சூனியம், மந்திரம் இதெல்லாம் சும்மா டா. நம்பக்கூடாது"

"இல்லைங்க உங்களுக்கு தெரியாது, எங்க தெருவில ஒருத்தர் கால்ல எலுமிச்சம்பழம் மிதிச்சி ரெண்டு வாரம் கால்ல கட்டி வந்து கஷ்டப்பட்டாருங்க" (இங்கே "ங்க" விகுதி என் விருப்பத்திற்காக. உண்மை தலைகீழ்)

"நல்லா தெரியுமா? அவருக்கு அதனாலதான் கட்டி வந்துச்சா?"

"அப்படிதாங்க சொல்லிகிட்டாங்க‌"

உடனே நான் சுஜாதா பாதிப்பில்,
"எலுமிச்சம்பழத்துல இருக்கறது சிட்ரிக் இல்ல இல்ல டார்டாரிக் இல்ல சிட்ரிக் ஆசிட் தான். அதனால ஒரு மண்ணும் ஆகிருக்காது, அவருக்கு அதனால ஆகிருக்காது"

நான் தலையில் ஏறத்தொடங்கிவிட்டேன் என்று தெரியவந்ததும்,
"சரிங்க. அப்படின்னா ஒண்ணு பண்ணுங்க. நான் இப்பவே ஃபோன் லைன கட் பண்ணிடறேன் நீங்க மாடில இருந்து கீழே போய் பேசுங்க, என்கிட்ட பேசிகிட்டுதானே மாடி ஏறி வந்தீங்க. அவ்ளோ பயம் இருக்குல்ல‌"

"சரி சரி உனக்கு செமெஸ்டர் ரிசல்ட் எப்போ வருதுனு சொன்ன? நல்லா தானே எழுதிருக்க?"

அது சரி இருட்டுக்கு பயப்படுவது பகுத்தறிவுக்குள் வருகிறதா?



Copyright 2006| Blogger Templates by GeckoandFly modified and converted to Blogger Beta by Blogcrowds.
No part of the content or the blog may be reproduced without prior written permission.