எங்கள் கடலூரை காப்பாற்ற எடுக்கபோகும் முயற்சிகளுக்காக நன்றி கனிமொழி.

கேன்சர் நகரமாக மாறிக்கொண்டு வந்த கடலூருக்கு சில தினங்கள் முன்பு கனிமொழி வருகை தந்தார்.

காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமாரின் வேண்டுகோளை ஏற்று கனிமொழி கடலூரில் உள்ள சர்ச்சைக்குள்ளான அந்த தொழிற்சாலைகளை(Shasun Chemicals and Tagros Chemical Ltd ) பார்வையிட்டார். சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த பார்வையில் விதிகளுக்கு புறம்பான இவ்விரு தொழிற்சாலைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் கடலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னகுமாரை, இப்பகுதி மக்களிடம் ஒரு மருத்துவ பரிசோதனை நடத்துமாறு கேட்டுக்கொண்டார். அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வமும் சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பனும் கலந்துகொண்டனர்.

தி.மு.க மகளிர் மாநாட்டுக்கு ஏற்பாடுகளை கவனிக்க கடலூர் வந்தபோது இப்படி ஒரு சோதனையை நடத்திச்சென்றுள்ளார் கனிமொழி.

எங்கள் கோரிக்கை இவ்வளவு நாளாக கிடப்பில் போடப்பட்டு இப்பொழுதாவது விடிவு தெரிகிறதே என்று மகிழ்ச்சி அடைகிறோம். விடியலை நோக்கி காத்திருக்கிறோம்.

கேன்சர் நகரம் கடலூர்

சாபக்கேடாக வந்து வாய்த்திருக்கின்றன சில வரங்கள் எங்கள் ஊருக்கு.
சிப்காட் தொழிற்பேட்டை கடலூருக்கு ஒரு வரப்பிரசாதமாக கருதப்பட்ட நிலையில் அது தன் கோரமுகத்தை காட்ட துவங்கியிருக்கிறது இந்த வரம்.

சாதாரணமாக 10 லட்சம் பேரில் ஒருவருக்கு வர வாய்ப்பு இருக்கும் கேன்சர், எங்கள் ஊரில் 1000‍ல் இருவருக்கு வர வாய்ப்ப்ய் இருப்பதாக கூறுகின்றன சோதனை அறிக்கைகள்.

மெல்ல மெல்ல ஊடுருவிக்கொண்டிருக்கிறது நோய். யாருக்கும் அறியாமல் ஆனால் உறுதியுடன்.

நாக்பூரில் அமைந்திருக்கும் தேசிய சுற்றுப்புறசூழல் ஆராய்ச்சி அமைப்பு தான் இத்தகவலை வெளியிட்டிருக்கிறது.

கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் இருப்பவை முழுவதும் கிட்டத்தட்ட கெமிகல் கம்பெனிகள். இருப்பது தவறில்லை யாருக்கும் பழுதில்லா நிலையில். என்ன எழுதுவது என்று தெரியாத நிலையில் தள்ளி என்னை வாட்டி எடுக்கிறது இச்செய்தி.

பகலை விட இரவுநேரங்களில் அதிக மாசு வாயுக்களை வெளியிட்டு கொல்கின்றன பெரும்பாலான தொழிற்சாலைகள்.

இது பற்றிய அறிக்கையை தேசிய சுற்றுப்புறசூழல் ஆராய்ச்சி அமைப்பு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு 2004‍ லிலேயே இந்த அறிக்கையை தந்துவிட்டதாம். இன்னும் சாவு எண்ணிக்கை வராததால் ஒருவேளை வாரியம் காத்திருக்கிறதென்று நினைக்கிறேன்.

சிப்காட்டை சுற்றி இருக்கும் பகுதிகளில் உள்ள காற்றில் வழக்கத்துக்கு மாறாக 94 வித மாசுக்கள் கலந்திருக்கின்றன. அவற்றில் 15 மிகக்கொடியவை.

இரத்தப்புற்றுநோயை உருவாக்கும் பென்ஸீன் இப்பகுதிகளில் 15 மடங்கு அதிக அளவில் உள்ளது.

இதில் முக்கிய விஷயம், இந்த சோதனைகளை செய்த நேரத்தில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்தனவாம். அதற்கே இந்த நிலைமை. அவையும் செயல்பட்டுக்கொண்டி(று)ருந்தால், என்ன நடந்திருக்கும்.

ஆங்கிலேயர் காலத்தில் தமிழகத்தின் முதல் தலைநகரமாக செயல்பட்டு வந்த கடலூர், இன்றும் அழியப்போவதிலும் முதலாவதாகவே உள்ளது.

ஒருவிதத்தில், கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வரும் "விடைகொடு எங்கள் நாடே" பாடல் எங்களுக்கும் பொருந்தும். ஒரே ஒரு மாற்றத்துடன் "விடைகொடு எங்கள் உலகே.......பிழைத்தால் வருகிறோம்".

மேலதிகத்தகவல்களுக்கு:

http://www.sipcotcuddalore.com/News_Thaindian_230308.html
http://www.sipcotcuddalore.com/pr_220308.html


Name of Chemical

Highest Level (microgram/m3)

Location

Times above safe levels

Benzene

31.174

Asian Paints

125

Carbon tetrachloride

72

Tagros Chemicals

553

Chloroform

74

Shasun

881

Methylene Chloride

133

Tanfac

32.5

Trichloroethylene

24

Aurobindo Chemicals

21.8



மேடையில் ஒரு(இரண்டு) மைக் கிடைத்துவிட்டால் கைதட்டல் வாங்க என்ன வேண்டுமானாலும் பேசலாமா?
வந்தது ரஜினி பற்றி பேசவா? இல்லை தமிழர் ப்ரச்சினை பற்றி பேசவா?

கர்னாடகத்திலிருந்து இங்கு வந்து சாப்பிடுவோர் வரவேண்டும் என்று முழங்கிவிட்டு, வந்தவரை மேடையில் வைத்துக்கொண்டு பேச வேண்டிய பேச்சுகளா இவை? கைதட்டல் வாங்க சிலர் பெயரை சொல்ல மாட்டேன் என்று ஆரம்பத்தில் சொல்லிவிட்டு இறுதி வரை அவர் வாலையே பிடித்துக்கொண்டு இருந்தது செம காமெடி போங்க. உங்க கேரக்டரையே புரிஞ்சிக்க முடிலயே!

உணர்ச்சி வசப்பட்டு பேசியதெல்லாம் சரிதான் அதற்காக அவ்வளவு கீழ்த்தரமான அநாகரீக வார்த்தைகளை மேடையில் பேசலாமா? மக்கள் உங்களை முட்டாக் அல்லது கேணக்/ப் (உங்கள் வார்த்தைகள் தான் தலைவா)என்று எண்ணமாட்டார்களா?

தமிழ் தமிழ் என்று இவ்வளவு பேசும் நீங்கள், தமிழ் மக்களுக்காக அப்படி ஏதும் பெரிதாய் செய்தது போல் தெரியவில்லையே? குறைந்தபட்சம் ஒரு நல்ல தமிழ் கலாச்சார படமாவது... அது சரி வரும் காசில் எனக்கே படம் எடுக்க மாட்டேன்றார் என்று சிபி குரல் கேட்கிறது. ஓடிய படங்களில் பாதி படங்கள் தானைத்தலைவர் கவுண்டமணிக்கும், மணிவண்ணனுக்குமே ஓடின. என்னமோ போங்க. ஒரு பெரியார் படத்தில் நடித்துவிட்டால் மட்டும் போதாது. இன்னும் வளரணும் தம்பி. வளரு வளரு.

வைரமுத்து இது என்னவோ ரஜினி முன்னேற்ற கழக துவக்க விழா போல் பேசியது ஒரு தனி காமெடி.
என்னத்த சொல்றது

வழியெங்கும் கதவுகள்
எல்லா பக்கங்களிலும்

இரு புறங்களிலும்
திறக்கக்கூடியவை

எல்லா வீட்டின் கதவுகளும்
ஆச்சர்யத்தை உள்ளடக்கியவை

பல வித உணர்ச்சிகளை கண்டுவிட்டு
மூடிக்கொள்கிறது
அல்லது திறந்து கொள்கின்றன‌

குழந்தைகள் இருக்கும் வீட்டுக்கதவுகள்
ஒருவித சந்தோஷத்துடனே எப்போதும் இருக்கின்றன‌

பல பல்லிகளின் வால்களையும்
சில நகங்களையும்
எடுத்துக்கொள்கின்றன‌
தங்கள் கோபத்தை சாந்திப்படுத்த‌

பல வேலைப்பாடுகளுடன் வரும் கதவுகள்
அழகாக சொல்கின்றன‌
அனுமதியின்றிஉள்ளே வராதே

நவீன கதவுகள்
உயிரின்றி இருக்கின்றன‌

புதியவர்களுக்கு முதுகைக்காட்டி
திறக்க மறுக்கின்றன‌

ம்ம்ம்ம்
இங்கு இன்னொரு கதவு திறந்திருக்கிறது

ஆனால் கதவு மட்டுமே இருக்கிறது
உள்ளும் வெளியும்
ஒரே விதமாய்.....



Copyright 2006| Blogger Templates by GeckoandFly modified and converted to Blogger Beta by Blogcrowds.
No part of the content or the blog may be reproduced without prior written permission.