நான் பார்த்த படம்: Perfume - The Story of a murderer

இந்த வாரம் கிடைத்த 3 நாட்கள் விடுமுறையில் நிறைய படங்களை பார்த்து தள்ளினேன். அதில் முக்கியமாக நான் ரசித்த படம் இது Perfume - The Story of a murderer.

பின்நவீனத்துவம், முன்பழையத்தனம் என்றெல்லாம் ஜல்லியடிக்க தெரியாதால்(நல்லவேளை பிழைத்தோம் என்ற குரல் கேட்கிறது ;) ), ஏதோ எனக்கு பிடித்த விஷயங்களை மட்டும் கூற விழைகிறேன்.


எனக்கு படத்தின் இயக்குனர், நடிகர்கள், நடிகைகள் பெயர் கூட தெரியாது. வேண்டுவோர் தயவு செய்து நண்பர் IMDB-ஐ கேட்கவும். தப்பித்தவறி ஆங்காங்கே இடம்பெற்றிருக்கும் சில தகவல்கள், முழுக்க முழுக்க copy-pase மட்டுமே.


Patrick Süskind எழுதிய Perfume என்ற நாவலைத்தழுவி எடுக்கப்பட்டிருக்கும் படம் இது.

ஒரு அழுக்கான மீன் மார்க்கெட்டில் பிறக்கும் ஒரு குழந்தை பிறந்தவுடன் தன் அம்மாவை காவு வாங்கி ஒரு அனாதை விடுதிக்கு வந்து சேர்கிறது. அங்கும் கீழ்த்தரமான சூழ்நிலையில் வளரும் அவன் 5 வயது வரை பேச்சு வராமல் இருக்கிறான். அங்கு அவனுக்கு ஒரு அதிசய ஆற்றல் இருப்பதை உணர்கிறான். அவனால் சாதாரணமானவர்களால் உணர்வதை விட பல மடங்கு மோப்பசக்தி இருக்கிறது.


இதை படத்தில் காட்டும் முதல் காட்சி, அவனை பின்னால் இருந்து ஒருவன் ஆப்பிளால் அடிக்க, அதை அவன் பின்திரும்பாமல் தலையை திருப்பி தப்பிக்கிறான். படுத்துக்கொண்டு பல வித வாசனைகளையும் அவன் மோப்பம் பிடித்து சொல்லும்போது நாமும் நம்மை அறியாமல் மோப்பம் பிடிப்பது திரைக்கதையின் வெற்றி.


அவன் விடுதியிலிருந்து வெளியேற்றி வேலைக்கு செல்லும்போது, முதன்முறையாக ஒரு இளம்பெண்ணின் வாசனையில் மனதை பறிகொடுத்து அதை கைப்பற்றும் முயற்சியில் அந்த பெண்ணை கொன்று விடுகிறான்.


அதிலிருந்து பெண்ணின் வாசனையை கைப்பற்றி பாதுகாத்துக்கொள்ளும் முயற்சியில் ஒரு Perfumer(நறுமணாளன் ;-) ) - இடம் வேலைக்கு சேர்கிறான். அங்கும் அவனால் பெண்ணின் நறுமணத்தை கைப்பற்றும் வித்தையை கற்றுக்கொள்ளமுடியாமல் வேறொரு ஊருக்கு சென்று தன் பணியை ஆரம்பிக்கிறான். அங்கு அதை கற்றுக்கொள்ளும் அவன் பல பெண்களை கொன்று அவர்களின் மணத்தை கொண்டு ஒரு தெய்வீக(!) நறுமணத்தைலத்தை தயாரிக்கிறான்.

இந்த முயற்சியில் கைதாகும் அவனுக்கு மரணதண்டனை அளிக்கப்படிகிறது. அப்போது அந்த தைலத்தை கொண்டு முழு ஊரையும் தன்வசப்படுத்தி தப்பிக்கிறான். இந்த காட்சியில் சுமார் 750 பேர் நிர்வாணமாகி புணர்வில் ஈடுபடுகின்றனர். அழகாக படமாக்கப்பட்டுள்ளது இந்த காட்சி (இதற்காகத்தான் நான் படம் பார்க்கவே ஆரம்பித்தேன் ஆனால் படத்தோடு ஒன்றுகையில் காட்சியில் அழகின் வீரியம் மட்டுமே உணர முடிகிறது).


இதில் நான் கதையை ஒரு Developing-Hints பாணியில் தான் சொல்லியுள்ளேன். இது ஒரு விஷுவல் திரைப்படம் இதை நான் காட்சிப்படுத்தி அழகை கெடுக்க விரும்பவில்லை(கெடுத்த வரை போதும் ;-) )


இதில் எனக்கு பிடித்த காட்சிகளாக பல காட்சிகள் அமைந்துள்ளன.


முதன் முறை பெண்ணை வாசனை பிடிக்கும் காட்சியை அழகாக எடுத்துள்ளனர். அந்த பெண் பிணமான பின்னும் அவன் அவளை வாசனை பிடிப்பது படு ஜோராக எடுக்கப்பட்டுள்ளது. பெண்ணின் ஸ்பரிசத்தில் அவள் மணத்தை உணர்ந்தவர்களால் இதை எளிதாக காட்சிப்படுத்திபார்க்க முடியும்.(இது ஆணாதிக்கத்தில் எழுதப்படவில்லை ;-) )


அவனுக்கு அடைக்கலம் தந்தவர்களை விட்டு அவன் பிரியும் போதெல்லாம் அவர்கள் இறப்பது மனதை என்னவோ யோசிக்கவைக்கிறது.


கதையோடு வரும் அந்த narration சிறப்பாக எழுதப்பட்டுள்ளது.


எல்லோரின் மணத்தையும் உணரும் அவன், மணமில்லா இடத்திற்கு வருவதும், அப்போது அவன் தனக்கென்று ஒரு மணம் இல்லாததை உணர்வதும் ஒரு அழகான self-realization. அந்த குகையும் அவனின் சிந்தனையும், திருவண்ணாமலை ரமணர் குகையும் ரமணரையும் நினைவு படுத்தியது.


இறுதிக்காட்சியில், ஒரு பெண்ணின் தந்தை அவனிடம் பேசுவதும்,அப்போது அவன் தன் முதல் கொலையை நினைத்து பார்ப்பதும் அழகான காட்சியமைப்பு.

படத்தினூடே வரும் பெண்களின் முழுஅழகு காட்சிகள் அழகான விதத்தில் எடுக்கப்பட்டிருக்கின்றன.

மொத்ததில் நன்கு ரசிக்ககூடிய படம்.

Dont miss it.

4 Comments:

  1. கருப்பன் (A) Sundar said...
    என்ன ஒரு கோயின்சிடன்ஸ், நானும் இந்த படத்தை போனவாரம் பார்த்துவிட்டு நண்பர்களிடம் புகழ்ந்து தள்ளிக்கொண்டிருந்தேன்!!!
    கிஷோர் said...
    //என்ன ஒரு கோயின்சிடன்ஸ், நானும் இந்த படத்தை போனவாரம் பார்த்துவிட்டு நண்பர்களிடம் புகழ்ந்து தள்ளிக்கொண்டிருந்தேன்!!!//

    சந்தோஷம் கருப்பன். வருகைக்கு நன்றி.
    ramalingam said...
    i also saw the movie and has written in my blog. really superb. i am happy to see a similar appreciation
    கிஷோர் said...
    நன்றி ramalingam

Post a Comment





Copyright 2006| Blogger Templates by GeckoandFly modified and converted to Blogger Beta by Blogcrowds.
No part of the content or the blog may be reproduced without prior written permission.