எழுத்தாளர்களை எழுத்தாளர்களாக பாருங்கள்.
ஒருவர் இறந்து இருக்கும் போது அவரைப்பற்றி பாராட்ட வேண்டாம் குறைந்தபட்சம் ஒரு சவத்துக்கு மரியாதை செலுத்தும் பொருட்டு அமைதியாவது காக்கலாமே. அது புரியாத அறிவிலிகள் உடனே பார்ப்பனீயம் பெரியாரியல் என்று பெரிய வெங்காயப்பொறியல்களை ஆரம்பிக்கின்றன.
அவரது எழுத்தை நேசிக்காமல் அவருடைய தனிப்பட்ட விஷயங்களில் நுழைந்து விமர்சனம் செய்வது கையாகாலாகாத்தனத்தயே காட்டுகின்றது.சுஜாதா போன்ற ஒரு ஜனரஞ்சக அல்லது அறிவியல் எழுத்தாளரிடம் இருந்து எதை எதை எதிர்பார்க்கமுடியுமோ அதை மட்டும் எதிர்பாருங்கள் மூடர்களே.
டாவின்சியின் படைப்புகளை ரசிப்பவர்கள் அனைவரும் அவரின் ஓரினப்புண்ர்ச்சியையும் ஆதரிப்பவர்களா? அல்லது அந்த ஒரு விஷயத்தை வைத்து அவருடைய படைப்பு சரி இல்லை என்பீர்களா? என்ன மடத்தனமான பேச்சு.
சிலர் இப்படித்தான் இருப்பார்கள். சுதந்திரதினம் அன்று, காந்தியை திட்டுவார்கள், சுதந்திரம் கிடைக்காமல் இருந்திருக்கலாம் என்று எழுதுவார்கள். அவர்களை எல்லாம் என்னவென்று சொல்வது??? வெறும் விளம்பரப்பிரியர்கள் மட்டுமே.
சுஜாதா ஒன்றும் சமுதாய சீர்திருத்தவாதி அல்ல. அவர் ஒரு எழுத்தாளர் மட்டுமே.
அவர் வந்தார், கடமையை சிறப்பாக செய்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் நேரத்தில் சில _______கள் ஹிட்ரேட்டை ஏற்றிக்கொள்ள செய்யும் இக்காரியங்கள் சுயஇன்பமே!!!!
லேபிள் சுஜாதா
தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளை பற்றியும் செய்தி தருகின்ற சேனல்கள் மிகக்குறைவு(இல்லை என்பதின் நாகரீக வடிவம்).
சன் தொலைக்காட்சியும் ஜெயா தொலைக்காட்சியும் அடித்த கூத்து இன்னும் நினைவில் இருக்கும் என்று நம்புகிறேன். உதாரணமாக கலைஞர் கைதின் போது கண்டனத்தை தெரிவியுங்கள் என்று சன் ஒரு ஜனாதிபதி அலுவலக தொலைபேசி எண்ணைக்கொடுக்க, அதே நேரம் ஜெயா காவிரி பிரச்சினைக்கு புகார் தெரிவியுங்கள் என்று பிரதமர் அலுவலக எண்ணையும் கொடுத்து அசத்தின.
இந்நிலையில் மேலிட பிரச்சினைகள் காரணமாக, சன் நல்ல பிள்ளையாகிவிட. இப்போது சன் செய்திகளில், கேப்டன் பேசுகிறார், அம்மா பேசுகிறார், ஆட்டுக்குட்டி பேசுகிறது. இது மிக தாமதமான கண் திறப்பு. ஆக இருந்தாலும் மக்கள் இன்னும் சன் செய்திகளையே பார்த்துக்கொண்டிருப்பதால் ஒரு விதத்தில் பலன் அளிக்கவே செய்கிறது.
சன் என்றாலே ஒரு சர்வாதிகார வெறுப்பு மனப்பான்மை பெரும்பான்மையானோருக்கு வந்துவிட்டதால், சன்னின் சூரியநமஸ்காரம் கண் கெட்ட பிறகே வந்திருக்கிறது.
தாமதம் என்பதால் இப்பதிவும் ஒரு சன்நமஸ்காரமே!