எப்படி மறக்கிறார்கள் சில விஷயங்களை?
எப்போதோ பள்ளியில் ஃபர்ஸ்ட் ரேங்க் எடுத்தபோது கிடைத்த பாராட்டுகளை!
பாஷை தெரியாத ஊரில் கிடைத்த சொந்த ஊர் சாப்பாட்டை!
பள்ளியில் இருந்து ம‌ருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது மெதுவாய் வலிக்காம‌ல் ஊசி போட்ட டாக்டரை!`
கல்லூரியில் ஒன்றாய் இருந்து விட்டு வேலைக்கு போனதும் நட்புகளை!
தோழனிடம் இருந்து திருடிய பொருட்களை!
காதலியுடன் செல்லும்போது ஆட்டோக்காரனிடம் வாங்கிய சில திட்டுகளை!
முதன்முதலில் மெளஸ் பிடித்து வரைந்த படத்தை!
2ரூபாய் டிக்கெட்டுக்கு 50ரூபாய்க்கு சில்லறை கொடுத்த கண்டக்டரை!
முதன்முதலில் பெண்களுக்கு முன் செல்ல வெட்கப்பட்ட கணத்தை!
இப்படித்தான் மறந்துகொண்டே செல்கிறோம்,
சில கணங்களை...

1 Comment:

  1. பாச மலர் / Paasa Malar said...
    ஆம்..இபடி மறக்க முடியாத சுவாரசியங்கள் எத்தனை எத்தனை..

Post a Comment





Copyright 2006| Blogger Templates by GeckoandFly modified and converted to Blogger Beta by Blogcrowds.
No part of the content or the blog may be reproduced without prior written permission.