இப்பாடலின் வலியும் ஆனந்தமும் ஒரு அயல்நாட்டில் இருந்து சொந்த நாட்டை நினைத்து உருகுபவனால் மட்டுமே முழுமையாக புரிந்துகொள்ள முடியும்.
மேலும் ரஹ்மானின் குரல் ஒரு விதமான உணர்ச்சியை கொடுக்கும் இனிய‌ குரல். அது சில இடங்களில் சிறப்பாக பயன்படுத்தபடுகிறது. சில இடங்களில் அய்யோ(எல்லா புகழும்... ATM-‍லிருந்து)

(இப்போது அஸ்லாமின் குரல் கூட அருமையாக வந்துகொண்டு இருக்கிறது. அதை பற்றி இன்னொரு பதிவில்)

அப்படி எல்லாமே நன்றாக சேர்ந்து வந்த ஒரு பாடல் இது. தேசம் படத்தில் இருந்து.

உந்தன் தேசத்தின் குரல்
தொலை தூரத்தில் அதோ
செவியில் விழாதா?
சொந்த வீடு உன்னை வாவென்று அழைக்கிறது தமிழா
அந்த நாட்களை நினை
அவை நீங்குமா உனை
நிழல் போல் வராதா?
அயல் நாடுந்தன் வீடல்ல விடுதியடா தமிழா

வானம் எங்கும் பறந்தாலும்
பறவை என்றும் தன் கூட்டில்
உலகம் எங்கும் வாழ்ந்தாலும்
தமிழன் என்றும் தாய் நாட்டில்
சந்தர்ப்பங்கள் வாய்த்தாலும்
அங்கு செல்வ மரம் காய்த்தாலும்
உள்மனத்தின் கூவல் உந்தன் செவியில் விழாதா?


கங்கை உனை அழைக்கிறது
யமுனை உனை அழைக்கிறது
இமயம் உனை அழைக்கிறது
பல சமயம் உனை அழக்கிறது
கண்ணாமூச்சி ஆட்டம் அழைக்க‌
சின்ன பட்டாம்பூச்சி கூட்டம் அழைக்க‌
தென்னம் தோப்பு துறவுகள் அழைக்க‌
கட்டி காத்த உறவுகள் அழைக்க‌
நீ தான் தின்ன நிலாச்சோறு தான் அழைக்க‌


பால் போல் உள்ள வெண்ணிலவில்
பார்த்தால் சில குறை இருக்கும்
மலர் போல் உள்ள தாய் மண்ணில்
மாறாத சில வலி இருக்கும்
க‌ண்ணீர் துடைக்க வேண்டும் உந்த்ன் கைகள்
அதில் செழிக்க வேண்டும் உண்மைகள்
இந்த தேசம் உயரட்டும் உன்னாலே
மக்கள் கூட்டம் வரட்டும் உன் பின்னாலே
அன்பு தாயின் மடி உனை அழைக்குதே தமிழா

2 Comments:

  1. Aruna said...
    வாங்க கிஷோர்...
    வாழ்த்துக்கள்!
    அன்புடன் அருணா
    கிஷோர் said...
    மிக்க நன்றி அருணா

Post a Comment





Copyright 2006| Blogger Templates by GeckoandFly modified and converted to Blogger Beta by Blogcrowds.
No part of the content or the blog may be reproduced without prior written permission.